பெண்களை வீக்கர் ஆஃப் த செக்ஸ்ன்னு சொல்வாங்க. இதுக்கு பலவாறாய் அர்த்தம் சொல்வாங்க. உடல்ரீதியாக பலவீனமானவங்கன்னு அர்த்தம்ன்னு சொல்வாங்க. ஆனா, ஆணுக்கு நிகரா எல்லா வேலைகளையும் செய்றாங்க. அடுத்து அறிவுரீதியா சொல்வாங்க. அதுவும் தப்புன்னு பெண்கள் நிரூபிச்சு எல்லா படிப்புகளிலும் வெளுத்து வாங்கி உயர் பதவிகளில் இருக்காங்க. அப்ப மனரீதியாக சொல்லலாமா?!
ம்ம்ம்ம் சொல்லலாம். ஏன்னா, பெண் மனசு இளகினது. சட்டுன்னு உணர்ச்சிவசப்படுவாங்க. காதல், ஆசை, பொன்னாசை, மண்ணாசைன்னு எதுக்காவது சட்டுன்னு எல்லாரையும் நம்பி ஏமாந்து போவாங்க(விதிவிலக்குகள் உண்டு.) அதனால் சொல்லி இருப்பாங்களோ?!
பிள்ளைநிலா படத்தில் ராதிகா பணக்கார வீட்டு பெண்ணாய், எதுக்கும் அஞ்சாத அறிவார்த்தமான பொண்ணா இருக்கும். மோகனோடு ஒரே காலேஜில் படிப்பாங்க. மோதல்ல ஆரம்பிச்சு பிரண்டாகி, மோகன் மேல் காதல்கொண்டு, ஒரு நாலு வருசம் கழிச்சு மோகனை சந்திச்சு தன்னோட காதலை சொல்லும். ஆனா, அந்த நேரத்தில் மோகனுக்கு கல்யாணமாகி ஒரு குழந்தைக்கும் தகப்பனா இருப்பார். ராதிகா காதலை ஏற்க மறுத்துடுவார். அப்ப ராதிகா சொல்லும் வசனம் டாப்..
இனிமே, எந்த பொண்ணாவது உங்கக்கிட்ட என்னைய பத்தி என்ன நினைக்குறீங்கன்னு கேட்டா, அப்பிடி இப்படி எதாவது சொல்லி புகழாதீங்க. ஏன்னா, பொண்ணுங்க மனசு எந்தளவுக்கு இறுக்கமோ, அந்தளவுக்கு இளக்கம், எந்தளவுக்கு இளக்கமோ அந்தளவுக்கு இறுக்கம்ன்னு சொல்லி சூசைட் பண்ணிக்கும். வீக்கர் ஆஃப் த செக்ஸ்ன்ற வார்த்தை கேட்டால், இந்த வசனம் நினைவுக்கு வரும்.
பிள்ளை நிலா படத்தில் வரும் ராஜா மகள்.. ரோஜா மலர் பாட்டு ரொம்ப பிடிக்கும். இந்த பாட்டு ரெண்டு முறை வரும். ராதிகாவை புகழ்ந்து வரும். அடுத்து சோகமா ஒருமுறை வரும்..
ராஜாமகள் ......ரோஜாமகள்.....
ராஜாமகள்...... ரோஜாமகள்
வானில் வரும் வெண்ணிலா
வாழும் இந்தக் கண்ணிலா
கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக்குயிலா?
ராஜாமகள்....... ரோஜாமகள்
பன்னீரையும் வெந்நீரையும்
உன்னோடுதான் பார்க்கிறேன்!!
பூவென்பதா?! பெண்ணென்பதா?!
நெஞ்சோடு நான் கேட்கிறேன்.
முள்ளோடுதான்.. கண்ணோடுதான்..
ரோஜாக்களும் பூக்கலாம்!!
அம்மாடி நான், அத்தோடுதான்
உன் பேரையும் சேர்க்கலாம்!!
கோபம் ஒரு கண்ணில்..
தாபம் ஒரு கண்ணில்..
வந்து வந்து செல்ல..
விந்தை என்ன சொல்ல?!
வண்ணமலரே!!
ராஜாமகள்....... ரோஜாமகள்.......
ஆடைகளும்.. ஜாடைகளும்...
கொண்டாடிடும் தாமரை..
வையகமும்... வானகமும்,,,
கைவணங்கும் தேவதை.
நீயும் ஒரு ஆணையி,ட
பொங்கும் கடல் ஓயலாம்!!
காலை முதல் மாலை வரை
சூரியனும் ஓயலாம்!
தெய்வமகள் என்று
தேவன் படைத்தானோ!?
தங்கச்சிலை செய்து
ஜீவன் கொடுத்தானோ?!
மஞ்சள் நிலவே....
ராஜாமகள்... ரோஜாமகள்...
படம்: பிள்ளை நிலா
இசை:இளையராஜா
பாடியவர்: ஜெயச்சந்திரன்.
எழுதியவர்:வாலி
இதே பாட்டு சோகபாட்டாவும் வரும்.. செத்துப்போன ராதிகா மோகனுக்கு மகளா பேபி ஷாலினியா பொறந்து வந்து பழிவாங்கும்.
ராஜா மகள் ரோஜா மகள்
வானில் வரும் வெண்ணிலா
வாழும் இந்தக் கண்ணிலா
கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக் குயிலா
பெண் : ராஜா மகள் ரோஜா மகள்
பெண் : முள்ளோடுதான் கள்ளோடுதான்
ரோஜாக்களும் பூக்கலாம்
அம்மாடி நான் அத்தோடுதான்
உன் பேரையும் சேர்க்கலாம்
பெண் : கட்டில் வர எண்ணம் இட்டு
தொட்டில் வந்து சேர்ந்தவள்
மன்னவனே உன் நினைவில்
வெண்ணிலவாய் தேய்ந்தவள்
பெண் : கோபம் ஒரு கண்ணில்
தாபம் ஒரு கண்ணில்
வந்து வந்து செல்ல
விந்தை என்ன சொல்ல
எந்தன் உயிரே…….ஏ…..ஏ…ஏ…..ஏ……
பெண் : ராஜா மகள் ரோஜா மகள்
வானில் வரும் வெண்ணிலா
வாழும் இந்தக் கண்ணிலா
கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக் குயிலா
பெண் : ராஜா மகள் ரோஜா மகள்
பெண் : முள்ளோடுதான் கள்ளோடுதான்
ரோஜாக்களும் பூக்கலாம்
அம்மாடி நான் அத்தோடுதான்
உன் பேரையும் சேர்க்கலாம்
பெண் : கட்டில் வர எண்ணம் இட்டு
தொட்டில் வந்து சேர்ந்தவள்
மன்னவனே உன் நினைவில்
வெண்ணிலவாய் தேய்ந்தவள்
பெண் : கோபம் ஒரு கண்ணில்
தாபம் ஒரு கண்ணில்
வந்து வந்து செல்ல
விந்தை என்ன சொல்ல
எந்தன் உயிரே…….ஏ…..ஏ…ஏ…..ஏ……
பெண் : ராஜா மகள் ரோஜா மகள்
அருமை...
ReplyDeleteஇனிமையான பாடல். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteஅருமையான பாடல்
ReplyDeleteராதிகா மோகனை காதலித்தது வெறும் நடிப்புனு நினைக்கிறேன்.
ReplyDeleteநல்ல பாடல்தான் சகோ
ரசித்த பாடல்...
ReplyDeleteஇனிமை...
ரசித்த பாடல்களில் ஒன்று !
ReplyDeleteஜெயச்சந்திரன் குரலில் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று.
ReplyDelete