Friday, June 07, 2013

கல்வி வரம் அளிக்கும் ”ஹயகீரீஸ்வர்” -ஸ்கூல் ரி ஓப்பன் ஸ்பெஷல்

 
                       
பசங்களுக்குலாம் ஸ்கூல் திறக்குற நாள் கிட்ட வந்துடுச்சு. அவங்க நல்லா படிக்கனும்ன்னு செங்கல்பட்டு மாவட்டத்துல இருக்குற  செட்டிப்புண்ணியம் தேவநாதசுவாமி கோயில் ஹயக்ரீஸ்வரர் கோவிலுக்கு போய் வந்தோம். 

ஒருமுறை உலகம் அழிய இருந்த சமயத்துல, இந்த உலகத்தையும், மக்களையும் தன்னுள்ளே அடக்கி, ஆலிலை மேல் குழந்தை வடிவத்தில் சயனித்தாராம் மகாவிஷ்ணு. பிறகு, புதிய உலகைப் படைப்பதற்காக தன் நாபிக்கமலத்திலிருந்து (தொப்புள்) பிரம்மனை படைத்து, நான்கு வேதங்களையும் அவருக்கு உபதேசித்தாராம். பிரம்மனும் படைப்புத்தொழிலை ஆரம்பித்தாராம்.
இதன்பின், மது, கைடபன் என்ற அசுரர்கள் பெருமாளின் உடலில் இருந்த தண்ணீர் திவலைகளில் இருந்து பிறந்தனராம். விஷ்ணுவின் பிள்ளைகள் என்ற தைரியத்தில், பிரம்மாவிடம் இருந்த வேதங்களை அபகரித்தனராம்... தங்களுக்கும் படைப்புத்தொழில் செய்ய உரிமை உண்டு என வாதிட்டு, பின், குதிரை முகம் கொண்டு பாதாளத்திற்கு சென்று வேதங்களை ஒளித்து வைத்தனராம்...,

இதனால்  படைப்புத்தொழில் நின்று போனது. மது, கைடபரால் உலகில் அசுரர்கள் அதிகரிப்பார்கள் என்ற நிலை ஏற்பட்டது. பிரம்மன் பெருமாளைச் சரணடைந்தராம்.., பெருமாள் பாதாள உலகம் வந்த போது, அங்கே அசுரர்கள் குதிரை வடிவில் இருப்பதைக்கண்டு,  உடனே தானும் குதிரை முகம் கொண்டு அவர்களுடன் போரிட்டு, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தார்.

அசுரர்கள் கைபட்டதால் தங்களது பெருமை குன்றியதாக நினைத்த வேதங்கள், தங்களை புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின. குதிரைமுகத்துடன் இருந்த பெருமாள் வேதங்களை உச்சிமுகர்ந்ததால், அந்த மூச்சுக்காற்றில் வேதங்கள் புனிதமடைந்ததாக இந்த புண்ணிய தளத்தோட வரலாறு.

கடலூருக்கு பக்கத்திலிருந்து “திருவஹீந்திரபுரம் தேவநாதன்” கோயிலில் இருந்து, அழகான பெருமாள் விக்ரகம் மற்றும் யோக ஹயக்ரீவர் ஒன்றை செட்டிப்புண்ணியத்துக்கு எடுத்து வந்து,  அவற்றை வைகாசி,  மகம் நட்சத்திரத்தில் செட்டிப்புண்ணியத்தில் பிரதிஷ்டை செய்தனர். பிறகு தாயார் ஹேமாப்ஜவல்லி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள், ஆண்டாள், ராமபிரான், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.  மூலவரை வரதராஜர் என்றும், உற்சவரை தேவநாத சுவாமி என்றும் அழைக்கின்றனர்.
இங்கு ”வித்யாதோஷ நிவர்த்தி”  ”சங்கல்ப ஆராதனை” என்னும் கல்வி பூஜை நடத்தப்படுகிறது.  இந்த சிறப்பு பூஜை தேர்வு வேளையில் செய்யப்படுகிறது. கல்வியாண்டு துவங்கும் வேளையிலும்,  மாணவர்களின் புத்தகம் மற்றும் எழுதுபொருட்களை எடுத்துச்சென்று பூஜை செய்தும் வரலாம். திக்குவாய் உள்ளவர்கள், பேச முடியாதவர்களுக்கு நாக்கில் தேன் தடவப்படுகிறது. இதன்மூலம் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்கிறார்கள்.

செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் செல்லும் வழியிலுள்ள சிங்கப்பெருமாள் கோயில் மகேந்திராசிட்டி ஸ்டாப்பில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் செட்டிப்புண்ணியம்ன்ற இத்திருத்தலம் இருக்கு.

கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 7.30 மணி முதல் மதியம் 12 வரை, மாலை 4.30 முதல் இரவு8 வரை. நங்க நட்ட நடு மத்தியானத்துலதான் போனோம். வெயில் கொளுத்தி படுத்தி எடுத்திட்டுது.

இன்னொரு மனதை நெருடலான ஒரு விசயம்.., வண்டியை விட்டு இறங்கியதும் பத்து வயது  கூட நிரம்பாத குழந்தைகள் துளசி மாலையும்.., கற்பூரத்தையும் விற்க ஓடி வந்து போட்டி போடுதுங்க. உலகத்தாருக்குலாம் கல்வி வரம் அளிக்கும் அந்த ”ஹயகீரீஸ்வர்” கண்ணுக்கு இக்குழந்தைகள் புலப்படவே இல்லியோ!?

 படம் கூகுள் ல இருந்து சுட்டது...,

Thursday, June 06, 2013

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்



1. சின்ன விசயத்திற்கெல்லாம் கணவனை துணைக்கு அழைப்பது

2. ஏதோ சொல்ல வந்து பின் ‘அதை விடுங்க’ என பொடி வைத்து பேசுவது . மூடி மறைத்து கணவனை உஷ்ணபடுத்துவது.

3. ‘அன்பு’ என்ற பெயரில் ஆயிரம் ‘போன்கால்’ பண்ணி நச்சரிப்பது

4. எதற்கெடுத்தாலும் அழுது வடிவது

5. ‘இவங்க தப்பா நினைப்பாங்க அவங்க தப்பா நினைப்பாங்க’ என்று தனக்காக வாழாமல் சமூகத்திற்கு பயந்து பயந்து வாழ்வது

6. சாப்பிடும் நேரம் பார்த்து குடும்ப பிரச்சினைகளை கிளறுவது. நமக்காக இரவில் சாபிடாமல் காத்து கொண்டிருப்பது .

7. வீட்டை அலங்கோலமாக போட்டு வைப்பது

8. நண்பர்களை பற்றி தவறாக பேசுவது

9. வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் ‘ரூல்ஸ்’ போடுவது

10. எதற்கெடுத்தாலும் கணக்கு கேட்பது

11. கணவன் வேலைவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது சொர்ணாஅக்கா ரேஞ்சுல முகத்தை வைச்சுக்கிட்டு பேசுவது…

12. எப்ப பாத்தாலும் நான் அழகாயில்லையாங்கன்னு கேட்டு நச்சரிச்சு அடிக்கடி கணவனைப் பொய் சொல்ல கட்டாயப்படுத்துவது.


  டிஸ்கி: ஃபேஸ்புக்குல ரசித்தது...,

Wednesday, June 05, 2013

சக மனிதனிடம் அன்பு காட்டுபவர்கள் யார்?! யார்?!


                                          (கட், காப்பி & பேஸ்ட்ன்னா இதானா?!)

       (சக மனிதன்கிட்ட அன்பு காட்ட வேண்டிய மனிதனை தவிர, அனைத்து    மிருகமும் மனிதன்கிட்ட அன்பாதான் இருக்கு...,)      
               
 (தாய்மைக்கு ஈடு இணை இவ்வுலகில் உண்டா?!)

 (சித்திரமும் கைப்பழக்கம்ன்றது இதானோ!?)

                                (கரெக்ட்தான்யா கேக்குறான்!!)
(முதல்ல குழாயை ஆஃப் பண்ணிட்டு.., அப்புறம் ஃபேஸ்புக்குல ஸ்டேட்டஸ் போடலாம்...)

(இந்த நொடி மட்டுமே நமக்கானதுன்ற உண்மையை உணர்ந்தவன் போல!)

(எவ்வளாவு அழகான் ரோடு!? மாலை நேரத்துல மனசுக்கு பிடிசவங்களோட ஒரு ரவுண்ட் போய் வந்தால்.., எப்படி இருக்கும்?!)

(பெண் என்றாலே  மூளையை பிச்சுக்க வைக்கும்ன்னு சொல்லாம  சொல்றாங்களோ!?

(இப்படிலாம் யோசிச்சா இந்தியா தாங்குமா?!)

Tuesday, June 04, 2013

உன் கோவத்தை அறிமுகப்படுத்தேன்..., ப்ளீஸ்!!

   

என்னவளே!
திக்குமுக்காட வைக்கும் உன் முத்தங்களும்..,
மென்சாரல் போன்ற உன் அணைப்புகளும்...,
மனக்காயத்துக்கு ஒத்தடம் கொடுக்கும் உன் புன்சிரிப்பும்...,
என்றும்......, அலுக்காததுதான் எனக்கு.

இருந்தாலும்,
இவையெல்லாம் பழக்கமாகிவிட்ட என் காதலுக்கு....,
உன் உதாசீனம், வெறுப்பு, அலட்சியம், வெகுளி போன்றாவற்றை..,
என்னவென்று நான் அறிய!!
எனக்கு அறிமுகப்படுத்த மாட்டா??!!

Monday, June 03, 2013

வெளிச்சம் வருவது எப்போது?! - ஐஞ்சுவை அவியல்

                              

   ஏனுங்க மாமா! மணி 6 க்கு மேல ஆகுது...,  வீடே இருட்டிக்கிட்டு வருது.., விளக்கு ஏத்தி வைக்க கூடாதா?! நாந்தான் கடைவீதிக்கு  போய் இருக்கேன்னு உங்களுக்கு தெரியாதா?!

ம்ம் இதோ வெளக்கு ஏத்திட்டு வரேன் இரு.. ஏம்புள்ள, வெளிச்சம் எப்போ வருதுன்னு தெரியுமா?! இதென்ன கூறுகெட்டத்தனமா ஒரு கேள்வி?! எதிர்ல இருக்கும் பொருளெல்லாம் தெரிய ஆரம்பிக்கும்ப்போது.. ..,

ம்ஹூம் தப்பு புள்ள! இதுக்கு பதிலை ஒரு  சாமியார் தன் சீடர்களுக்கு சொல்லியிருக்கார்.., அதை உனக்கு சொல்லுறேன்.

ஒருநாள் குருகுலத்தில..., தன்னோட சீடர்களை பார்த்து...,  சீடர்களே! வெளிச்சம் வருவது எப்போது?!ன்னு குரு கேட்டார்...

அதுக்கு முதல் சீடன்  எதிர் மனையில் கட்டியிருக்கும் குதிரை.., கழுதையா?! குதிரையா?!ன்னு தெள்ளத்தெளிவா பார்க்கும்போது வெளிச்சம் வந்துட்டுதுன்னு அர்த்தம்ன்னு சொன்னான். அடுத்த சீடன்..,  குருவே! அதோ அந்த வயல் ஓரத்தில இருக்குறது பனை மரமா?! இல்ல தென்னை மரமான்னு தெரிய வரும்போது வெளிச்சம் வந்துடுச்சுன்னுசொன்னான். கடைசி சீடன் அதெல்லா இல்ல குருவே!  அதோதோதோதோ தெரியுற மாமரத்துல இருக்குறது மாம்பழமா?! இல்ல மாங்காயா!?ன்னு தெரியும் போது வெளிச்சம் வந்துடும் ஐயா!ன்னு சொன்னான்.

அவங்கலாம் சொன்னதுலாம் சரிதானுங்களே மாமா! 

இல்ல புள்ள! மேலோட்டமா கேள்வியை பார்த்தா அப்படிதான் தெரியும்.. ஆனா, அந்த குருவோட பதிலை கேட்டுட்டு சொல்லு எது சரின்னு.

  “சீடர்களே! நீங்க சொன்ன பதில்லாம் சரியானது  இல்ல.., ”அடுத்தவன் சொல்லாமல் அவன் பசியறிந்து.., அவன் பசியாற உணவை தர்ற அளாவுக்கு நம்ம மனசு எப்போ பக்குவப்படுதோ, அப்போதான் வெளிச்சம் வந்ததா அர்த்தம்”ன்னு சொன்னாரு.இப்ப சொல்லு புள்ள எது சரின்னு?

அந்த குரு சொன்னது சரிதானுங்க மாமா.  பசிக்கொடுமையைவிட மோசமானது உலகத்துல ஏதும் இல்லீங்க மாமா.  ஏனுங்க மாமா! உங்க போன் அடிக்குது பாருங்க. எடுத்து பேசுங்க.

                                      

பேசிட்டேன் புள்ள,நம்ம காத்தமுத்துதான் பேசினான். புதுசா ஃபோன் வாங்க போறானாம்.., என்னை கூப்பிட்டான்.

ஏனுங்க மாமா! உலகத்துல இருக்குற மொழில எத்தனை கோடி வார்த்தைகள் இருக்கு. ஆனா, ஃபோனை எடுத்ததும் ஏன் மாமா “ஹலோ”ன்னு சொல்லுறோம்?!

அது , போனை கண்டுபிடிச்சவன் பேரா இருக்கும்! நமக்கு என்ன தெரியும்?!

இல்ல மாமா!, ”ஹலோ”ன்றது ஒரு பொம்பளை புள்ளையோட பேரு. ”மார்கரெட் ஹலோ”ன்றாதுதான் அவங்க பேரு .டெலிபோனை கண்டுபிடிசாரே நம்ம கிரஹாம்பெல் அவருடைய காதலி தான் இந்த “மார்கரெட் ஹலோ”.அவர் போனை கண்டுபிடித்தவுடன் ”ஹலோ! ஹலோ”!ன்னு அவர் காதலி பெயரை தான் சொன்னாராம்.போனை கண்டுபிடித்த கிரஹாம்பெல்லை நாம் மறந்து இருந்தாலும் அவர் காதலி பெயரை நியாபகம் வைத்து கொள்ளம்படி செய்துட்டார்.அந்த காலத்துலையே தன் காதலுக்கும் காதலிக்கும் மரியாதை செய்து இருக்கிறார்! ! ! ! நீங்களும் தான் இருக்கீங்களே!


 ம் ம் ம் எல்லாம் சரி புள்ளே! அவ காதலி தூரமா இருந்து அவன் முன்னேற்றத்துக்கு ஹெல்ப் பண்ணா!. நீ பக்கத்துலயே இருந்துக்கிட்டு...,

 உயிரை வாங்குறேன்னு சொல்றீங்களா?!  நான் எங்கம்மா வீட்டுக்கு போறேன்.., அப்புறம் தெரியும் என் அருமை!!

போடி போ. அம்மா வீட்டுக்கு போறாளாம். எந்த பஸ் ஏறனும்? எங்க இறங்கனும்ன்னு கூட உனக்கு தெரியாதே! ஹா!  ஹா! ஹா!

ம்க்கும்.., இது கூட தெரியாதா?! மைல் கல்லை பார்த்தா எம்புட்டு தூரம்ன்னு தெரிஞ்சுடப்போகுது. அப்புறம் அதுக்கு தகுந்தாப்புல பஸ் ஏறிக்க போறேன்.

ஓ அப்பிடியா?! என் செல்லக்குட்டி.., மைல் கல்லை வெச்சு தூரத்தை மட்டுமில்ல. வேற ஒரு விசயத்தையும் தெரிஞ்சுக்கலாம். அது என்னன்னு உனக்கு தெரியுமா?!

தெரியாதே மாமா.

                                          


மைல் கல்லுல இருக்குற   கலரை வச்சு அது எந்த ரோடுன்றதை தெரிஞ்சுக்கலாம் புள்ள.

அப்படியா மாமா! எப்படின்னு எனக்கும் சொல்லிகுடுங்களேன்.

 மைல்கல்லுல மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் இருந்தா அது, ”தேசிய நெடுஞ்சாலை”.., பச்சை மற்றும் வெள்ளை கலர்  இருந்தா  ”மாநில நெடுஞ்சாலை”  நீலம் மற்றும் வெள்ளை கலர்ல இருந்தா  ”மாவட்டசாலை”* பிங்க் அல்லது கருப்பு, வெள்ளைகலர்ல இருந்தா”ஊரக சாலை”ன்னு தெரிஞ்சுக்கலாம் புள்ள. 

ஓ இம்புட்டு விசயம் இருக்கா?! கலர்ல?! ஏனுங்க மாமா! அந்த பப்பாளி மரத்தை வெட்ட சொல்லி எத்தனை நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன். இப்போ சும்மாதானே இருக்கீக. வெட்டிடுங்களேன்.

                                     

வேணாம் புள்ள! இருக்கட்டும் யூஸ் ஆகும் புள்ள!.

என்ன மாமா! பத்து ரூபா குடுத்தா இம்பாம்பெரிய பழம் குடுக்க போறாங்க. அதுக்காக ஏன் இந்த மரத்தை வெச்சிருக்கனும். வெட்டிட்டா இடம் சீராகும் எதாவது பூச்செடி வெச்சுக்கலாமே!

இல்ல புள்ள! வாழை மரத்தை போலவே பப்பாளியோட ஒவ்வொரு பார்ட்டும் யூஸ் ஆகும் நமக்கு.., டாக்டர்சுக்கு சவால் விடுற புத்துநோயை குணப்படுத்த, பப்பாளி இலைல எதிர்ப்பு சக்தி இருக்குறதா கண்டுப்பிடிச்சு இருக்காங்க. பப்பாளில இருக்குற என்சைம்கள் புத்துநோயை குணப்படுத்த கூடியதாம்..., குழந்தைகளுக்கு பப்பாளி பழம் குடுத்து  வந்தால் எலும்பு வளர்ச்சியும், பல் வளார்ச்சியோடு பலமாவும் இருக்குமாம். அத்தோட, குழந்தை பெத்த பொன்னுங்களுக்கு குடுத்தா அதிகமா பால் சுரக்குமாம்..,  அடிக்கடி பப்பாளி சாப்பிட்டு வந்தா னோயும் அண்டாதாம்.., ஆரோக்கியமா இருப்பாங்களாம்.  பப்பாளி பழத்தை முகத்துல தேச்சுக்கிட்டா தோல் சாஃப்டாவும், மினுமினுப்பாவும் இருக்குமாம்.  பப்பாளில இருக்குற, ”பப்பாய்ன்” ன்ற என்சைம்ல இருக்குற ”ஆர்ஜினைன்”ன்றது ஆண்களுக்கு ஆண்மைதன்மை பெருக்குது.. அது மட்டுமில்லாம ரத்த விருத்ஹ்டியும், ஞாபகசக்தியை அதிகரிக்குது. பப்பாளி சாப்பிட்டு வந்தால் பித்தமும் குறையுமாம். தேள் கடிச்ச இடத்துல இதோட விதையை அரைச்சு பூசினா விசம் முறிஞ்சு போகுமாம். இதெல்லாம் நான் சொல்லலை புள்ள! இங்கதான் படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்.

இப்ப சொல்லு மரத்தை வெட்டவா?

வேணாம் மாமா! இவ்வளவு யூஸ் ஆகுற பப்பாளி மரத்தை வெட்டுனா அப்புறம் அந்த ஜோக்குல வந்த குட்டிப்பையன் புத்திசாலித்தனம் போல ஆகிடும்.., 
                                        



அதென்ன ஜோக் புள்ள!

ஒரு எல்.கே.ஜி புள்ள தன் மிஸ்சுக்கு ஃபோன் பண்ணி
இன்னிக்கு கோகுல் ஸ்கூலுக்கு வர மாட்டான், அவனுக்கு உடம்புக்கு முடியலைன்னு சொன்னானாம். அதுக்கு மிஸ், நீங்க யார் பேசுறீங்க?ன்னு கேட்டாங்களாம். அதுக்கு அந்த குட்டி பையன், என்னோட அப்பாதான் பேசுறாங்கன்னு சொன்னானாம்.

ஹா! ஹா! ரொம்ப சுட்டி பையந்தான். எனக்கு பசிக்குது எதாவது சமைச்சுட்டு வாயேன்.

சரிங்க மாமா! ரொம்ப நேரமா பேசிட்டு இருந்துட்டோம். நான் போய் சமைச்சு கொண்டாரேன்.