Sunday, May 20, 2018

கண்ணில் வந்ததும் நீதான்.. பாட்டு கேக்குறோமாம்

அழகான தமிழில் டூயட் பாடல்...

இன்னொரு டூயட்..

அழகானதொரு கூட்டு குடும்பத்தை காட்சிப்படுத்தும் பாடல்..

சன் டிவி ஆதிக்கத்துக்கு பின் தியேட்டருக்கு போய் படம் பார்க்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிட்டுது. அதும் 2000களில் படம் பார்ப்பதே குறைஞ்சு போச்சுது. படத்தோட சில காட்சிகளை டிவியில் போக வர பார்ப்பதோடு சரி.  பாடலுக்காக இந்த படத்தை பார்க்கனும்ன்னு தோனிச்சுது. படத்தை பார்த்ததும் மாதவனோடு, பாவனாவோடு படமுமே பிடிச்சுட்டுது. இப்ப படத்தில் வராத அழகானதொரு கூட்டு குடும்பம், ஆங்கில கலப்பில்லாத தமிழ் வார்த்தைகளை மட்டுமே பேசவிட்டு படம் எடுத்திருக்காங்க.  ஆனா படம் வெற்றி பெறலைன்னு நினைக்குறேன். 
யுவன் சங்கர் ராஜா இசையில்.. நா.முத்துக்குமார் வரியில் ஒரு சோகப்பாட்டு...

கண்ணில் வந்ததும் நீதான்...

கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி!!

காதல் சொன்னதும் நீதான்..
காயம் தந்ததும் நீதான் கண்மணி!!

நினைவை தந்ததும் நீதான்...

இன்று நெருப்பை தந்ததும் நீதான் கண்மணி!

உன்னை பிரிந்து போகையிலே
உள்ளம் எரிந்து போகுதடி உயிரே உயிரே
கண்ணில் வந்ததும் நீதான்...

கண்ணீர் தந்ததும் நீதான்....

உன்னுடைய கால் கொலுசு எங்க வீட்டில் கேட்டிடுமா?!
உன்னுடைய புன்சிரிப்பு என் உதட்டில் பூத்திடுமா?!
உன்னுடைய கைவிரலை என் விரல்கள் பிடித்திடுமா?!
உன்னுடைய இதயத்திலே என் துடிப்பு ஒலித்திடுமா?!
உயிரே உயிரே உனக்காய் வாழ்கிறேன்...


உன்னுடைய பூ முகத்தை பார்த்து கொண்டே நான் இருப்பேன்!!
உன்னுடைய ஞாபகத்தை விட்டு விட்டால் நான் இறப்பேன்...
உன்னுடைய நினைவுகளை உள்ளுக்குள்ளே தேக்கி வைத்தேன்!!
என்னிடத்தில் எதுவும் இல்லை உயிர் மட்டும் பாக்கி வைத்தேன்..
உயிரே உயிரே உனக்காய் வாழ்கிறேன்...

கண்ணில் வந்ததும் நீதான்..
கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி!!
காதல் சொன்னதும் நீதான்...
காயம் தந்ததும் நீதான் கண்மணி!!
நினைவை தந்ததும் நீதான்...
இன்று நெருப்பை தந்ததும் நீதான் கண்மணி!!
உன்னை பிரிந்து போகையிலே
உள்ளம் எரிந்து போகுதடி உயிரே உயிரே!!

கண்ணில் வந்ததும் நீதான்...
கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி கண்மணி..

கலங்கடிக்கும் குரலில் ஏற்ற இறக்கத்தோடு ஹரிசரண் குரலை கேட்கும்போது நமக்கும் நம்ம லவ்ஸ் ஞாபகம்லாம் வந்து போகும். வரலைன்னா ரசனையும், காதலும் இல்லா ஜென்மம்ன்னு அர்த்தம்.

சீமான் இயக்கம்ன்னு நினைக்குறேன்.
நன்றியுடன்,
ராஜி(காந்திமதி)

2 comments:

  1. நல்ல பாடல்கள் இரசித்தேன்.

    ReplyDelete
  2. இந்தப் பாடல்கள் கேட்ட நினைவில்லை.

    ReplyDelete