Wednesday, May 06, 2020

பக்தனின் நம்பிக்கைக்காக ஓடோடி வந்த விஷ்ணு பகவான் -நரசிம்ம ஜெயந்தி வழிபாடு

முன்கூட்டியே முடிவெடுத்து அவதரித்து, தக்க சமயம் பார்த்து தீயவர்களை அழிக்க கடவுள் எடுத்த அவதாரங்கள் பல. ஆனா, பக்தனை காக்கவேண்டியும், பக்தனின் நம்பிக்கையை காக்க வேண்டியும், நொடிப்பொழுதில் இறைவன் எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரம். பக்தனின் நம்பிக்கையை காப்பாற்றியதற்காகவே விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் மிக உயர்ந்ததும், கால அளவில் மிகச்சிறியதுமென நரசிம்ம அவதாரம் போற்றப்படுது.  தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரம் 4வது ஆகும்.

முன்கூட்டியே முடிவெடுத்து அவதரித்து, தக்க சமயம் பார்த்து தீயவர்களை அழிக்க கடவுள் எடுத்த அவதாரங்கள் பல. ஆனா, பக்தனை காக்கவேண்டியும், பக்தனின் நம்பிக்கையை காக்க வேண்டியும், நொடிப்பொழுதில் இறைவன் எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரம். பக்தனின் நம்பிக்கையை காப்பாற்றியதற்காகவே விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் மிக உயர்ந்ததும், கால அளவில் மிகச்சிறியதுமென நரசிம்ம அவதாரம் போற்றப்படுது.  தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரம் 4வது ஆகும்.
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருமளவுக்கு பிரகலாதன் அப்படியென்ன தவம் செய்தான்?!  இத்தனைக்கும் விஷ்ணுவை பரம எதிரியாக நினைக்கும் இரண்யகசிபுவின் புதல்வன்தான் இந்த பிரகலாதன். அவன் குரலுக்கு இறைவன் ஏன் ஓடி வரனும்!? இதை தெரிஞ்சுக்க பிரகலாதனின் முன்ஜென்ம கதைக்கு போகனும்.. இப்பிறவியில் சிறந்த பக்தனாக பிறந்த பிரகலாதன் முற்பிறவியில் கயவனாக, கள்வனாக, மக்களுக்கு துன்பங்களை அளித்து பாவங்களை சேமித்து வந்த மகாபாவியாக இருந்தான். அப்போது அவன் பெயர் சுவேதன். அவன் தன் இறுதிக்காலத்தில் தவறுகளை எண்ணி வருந்தி, தன்னை மன்னித்து அருளுமாறு மகாவிஷ்ணுவை வேண்டினான். விடாது ஓம் நமோ நாராயாணாய என்ற மந்திரத்தை ஜெபித்து மகாவிஷ்ணுவின் அருட்காட்சிக்காக காத்திருந்தான். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. இந்த பிறவியில் நீ என்னை தரிசிக்க இயலாது. உன் அடுத்த பிறவியில் நீ அழைத்ததும் வருவேன் என அக்குரல் சொன்னது. குரல் வந்த திசையை நோக்கி கைக்கூப்பியபடி உயிரைவிட்டான் சுவேதன். வாழ்நாளில் கடைசி தருணத்தில் கடவுளின் காட்சிக்காக காத்திருந்து உயிரைவிட்ட சுவேதன்தான் அடுத்த பிறவியில் பிரகலாதனாக விஷ்ணுவை பரம எதிரியாக கருதும் இரண்யகசிபுவுக்கு மகனாக பிறந்தான்.




யார் இந்த இரணியன்?
முனிவர்கள் சிலர் மகாவிஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் வந்தனர், லட்சுமி தேவியும், மகாவிஷ்ணுவும் தனித்திருந்த சமயமாதலால் முனிவர்களை வாயிலேயே துவார பாலகரான ஜெயனும், விஜயனும் தடுத்து நிறுத்தினர் . இதனால் கடுங்கோபம் கொண்ட பூலோகத்தில் பிறந்து அல்லல் படவேண்டும் என சாபம் விட்டனர். ஜெயனும், விஜயனும் மனம் வருந்தி, மகாவிஷ்ணுவை எண்ணினர். உடனே மகாவிஷ்ணு அங்கு வந்தார். நடந்தை கேள்விப்பட்டு, முனிவர்களின் சாபத்தை திரும்ப பெற இயலாது. அதனால், நீங்கள் இருவரும் பூமியில் பிறந்தே ஆகவேண்டும் என மகாவிஷ்ணு கூறினார்.  ஜெயனும், விஜயனும் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு சாபத்தை தளர்த்த வேண்டினர். துவாரபாலகர்களே! , பனிரெண்டு பிறவிகளில் என்னை சதாசர்வக்காலமும் துதித்து பூமியில் வாழ்ந்து என்னை வந்து அடைகிறீர்களா?! அல்லது மூன்று பிறவிகள் என்னை நிந்தித்து என்னை எதிர்த்து போரிட்டு அதன்பின் வைகுண்டம் வர விருப்பமா என்று கேட்டார். பனிரெண்டு பிறவிகள் தங்களை பிரிந்திருக்க எங்களால் இயலாது. அதனால் மூன்று பிறவிகளில் உங்களை நிந்தித்து உங்களுடன் போரிட்டு வைகுண்டம் வந்து சேர்கிறோம் என ஜெயனும் விஜயனும் ஒருசேர சொன்னார்கள்.   மகா விஷ்ணுவும் அவ்வாறே அருளினார்.



இந்நிலையில் பூவுலகில் பிரஜாதிபதி என்னும் முனிவர் மாலை நேர பூஜை செய்துக்கொண்டிருந்தார். அச்சமயம் அவரது மனைவி திதி அவரை கட்டி தழுவினாள். அதன்விளைவில் அவர்களுக்கு இரண்டு அசுர குணம்கொண்ட மக்கள் பிறந்தார்கள். அவர்களே இரண்யாட்சன்,இரண்யகசிபு என்ற இரண்யன். பிறக்கும்போதே அவர்கள் கரிய நிறமும், முரட்டு குணமுமாய் இருந்தனர்.  அவர்கள் வளரவளர தேவர்கள் அஞ்சினர்இந்த இருவரும்  கடுந்தவம் புரிந்து அரிய  வரங்களைப் பெற்றார்கள்ஒரு   சமயம் இரண்யாட்சன்பூமாதேவியை கவர்ந்து பாதாள லோகத்தில் கொண்டு சென்று மறைத்து வைத்தான். விஷ்ணு வராக(பன்றி) அவதாரமெடுத்து,  பாதாள லோகம் சென்று இரண்யாட்சனை வதம் செய்து பூமாதேவியை மீட்டு கொண்டு வந்தார். பூமாதேவிக்கும், விஷ்ணுக்கும் நரகாசூரன் பிறந்தான்.

இரண்யாட்சன் வதம் செய்யப்பட்டதையறிந்த இரணியகசிபு மகாவிஷ்ணுமீது கடுங்கோபங்கொண்டு, அவரை அழிக்க எண்ணி, அதற்கான பலத்தினை பெறுவதற்காக சிவனை நோக்கி கடும்தவம் செய்வதற்காக மந்தாரமலையில் உள்ள குகை ஒன்றினுள் புகுந்துக்கொண்டான். அப்போது அவன் மனைவி லீலாவதி கர்ப்பவதியாக இருந்தாள். அவளை  அசுர குலகுருவான சுக்ராச்சாரியாரிடம் ஒப்படைத்துவிட்டு இரண்யகசிபு தவமியற்ற சென்றான். சுக்ராச்சாரியாரின் ஆசிரமத்தில் லீலாவது உறங்கிக்கொண்டிருந்தாள். அங்கு வந்த  நாரதர், கர்ப்பத்திலிருக்கும் சிசுவுக்கு விஷ்ணு உபதேசம் செய்தார்.   ஸ்ரீமன் நாராயணன் தான் ஈரேழு உலகத்திற்கும் அதிபதி என்றும்,  ஓம் நமோ நாராயணாய எனும் மகாவிஷ்ணூவின் மூல மந்திரத்தையும் உபதேசித்தார்.   ஸ்ரீமன் நாராயணன்தான் ஈரேழு உலகத்திற்கும் அதிபதி என்றும், ஓம் நமோ நாராயணாய எனும் மகாவிஷ்ணுவின் மூல மந்திரத்தையும் உபதேசித்தார். தாயின் கர்ப்பத்திலிருந்த குழந்தை நாரதரின் உபதேசத்தை உன்னிப்பாக கேட்டதுமில்லாமல், அப்பொழுதே ஓன் நமோ நாராயாணாய என முணுமுணுக்க ஆரம்பித்தது. சிறிது நாளில் லீலாவதி அழகிய ஆண்மகனை ஈன்றெடுத்தாள். அவளுக்கு பிரகலாதன் என பெயர் சூட்டப்பட்டது.



மனிதனுமல்லாத மிருகமுமல்லாத உயிரினத்தால், உள்ளேயுமல்லாமல், வெளியேயுமல்லாத இடத்தில், ஆகாயமுமல்லாத பூமியுமில்லாத வெளியில், இரவுமில்லாத பகலுமல்லாத வேளையில், எந்தவித ஆயுதத்தாலின்றி ஒரு சொட்டு ரத்தமும் கீழே சிந்தாத வகையில் தனக்கு மரணம் நிகழவேண்டுமென சிவனிடம் வரம்பெற்று அரண்மனைக்கு திரும்பி, அனைவரும் தன்னையே கடவுளாய் வணங்கவேண்டுமென கட்டளையிட்டான். மீறியவர்களை கடுமையாய் துன்புறுத்தவும் செய்தான்.
வருடங்கள் பல கடந்தன. பிரகலாதன் அசுரக்குலத்தில் பிறந்தாலும் ஓம் நமோ நாராயாணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை எப்போதும் ஜெபித்துக்கொண்டே இருந்தான். இதனை கண்ட இரணியன், அந்த பெயரை உச்சரிக்காதே! இந்த உலகங்கள் அனைத்திற்கும் நானே அதிபதி. என் பெயரைச்சொல். இரண்யாய நமக என்று சொல் என்று கட்டாயப்படுத்தினான். ஆனால், பிரகலாதனோ மகா விஷ்ணுவே முழுமுதல் கடவுள் என்பதில் உறுதியாய் இருந்தான். எத்தகைய அச்சுறுத்தலுக்கும் தண்டனைக்கும் அவன் அஞ்சவில்லை. வெறுத்துப்போன இரணியன், தன் தங்கை ஹோலிகாவை அழைத்து, இவனை நெருப்பு வளையத்திற்குள் அழைத்து சென்று பஸ்பமாக்கிவிடு என உத்தரவிட்டான்.


இரணி்யனின் தங்கை ஹோலிகா நெருப்பால் பாதிக்கப்படாத வரம் பெற்றவள்.அவள் அண்ணன் சொல்படி பயங்கரமாக எரிந்துக்கொண்டிருந்த நெருப்பு வளையத்திற்குள் பிரகலாதனை அழைத்து சென்றாள். கடும் அனல் வாட்டி எடுத்தபோதும் பிரகலாதன் கைகளை கூப்பியபடி ஓம் நமோ நாராயணாய  என ஜெபித்துகொண்டே இருந்தான். தீய எண்ணத்துடன் நெருப்பினுள் சென்ற ஹோலிகா பஸ்பமானாள்.  நாராயண மந்திரத்தினை ஜெபித்துக்கொண்டே சென்ற பிரகலாதன் புடம் போட்ட தங்கமாய்  புதுப்பொலிவுடன் வெளியே வந்தான். இதனை கண்ட இரணியனின் கோபம் பன்மடங்காக பெருகியது. அவன் பிரகலாதனிடம் உன் நாராயணன் எங்கே?! அவனை காட்டு என பிரகலாதனை மிரட்டினான். ஸ்ரீமன் நாராயணன்  துரும்பிலும் இருப்பான், தூணிலும் இருப்பான் என பதிலுரைத்தான் பிரகலாதன், இதோ இந்த தூணில் உன் நாராயணன் இருக்கிறானா என இரணியன் கேட்க. ம்ம்ம் இருக்கிறான் என பிரகலாதன் பதிலுரைக்க, ஆக்ரோசமாய், அருகிலிருந்த தூணை தன் கையிலிருந்த கதாயுதத்தால் தாக்கினான்.



இரணியகசிபுவுக்கும் பிரகலாதனுக்கும் வாக்குவாதம் நடந்தது பிரதோஷ வேளை முடியும் நேரமாகும். பிரதோச நேரமென்பது ,மாலை 4.30 டூ 6 மணி என்பது நமக்கு தெரியும். இரவுமல்லாத பகலுமல்லாத மாலை வேளை, மனிதனுமல்லாத, மிருகமுமல்லாத மனித உடலும், சிங்க முகமுமாய் நரசிம்மர்   தூணில் தோன்றினார்.  வானத்திலுமல்லாது, பூமியுமல்லாது தன் மடியில் கிடத்தி, எந்த ஆயுதத்தாலுமல்லாமல் தனது கூரிய நகத்தால் அவன் மார்பினை பிளந்து ரத்தம் கீழே சிந்தாமல் உறிஞ்சு எடுத்து குடலை மாலையாக போட்டுக்கொண்டு இரணியனை சம்ஹாரம் செய்தார். இந்த காட்சியை பிரகலாதன் மட்டுமல்லாமல் தேவர்கள் உட்பட அசுரர்கள் மனிதர்கள் என அனைவரும் கண்டனர். 



இரணியகசிபு வதம் முடிந்ததும் தன் ஆக்ரோஷம் குறையாமலிருந்த நரசிம்மரை நெருங்க அனைவரும் பயந்த நேரத்தில் பிரகலாதன் நெருங்கி பாடல்பாடி நரசிம்மரின் ஆக்ரோஷத்தை தனித்து, தன் எதிரே சிங்கமுகத்துடனும், மனித உடலுடன் காட்சியளித்த நரசிம்மமூர்த்தியை கைக்கூப்பி வணங்கினான். அப்போது அவனுக்கு முற்பிறவி நினைவுக்கு வந்தது. பகவானே! முற்பிறவியில் நான் வேண்டிக்கொண்டதற்கினங்க இப்பிறவியில் எனக்காக நரசிம்ம மூர்த்ஹ்டியாய் அவதாரம் எடுத்து அருள்புரிந்தீர் என  மகாவிஷ்ணுவின் பாதம் பணிந்தான். உக்கிரம் தணிந்த நரசிம்ம மூர்த்தி பிரகலாதனை அள்ளி எடுத்து தனது மடியில் அமரவைத்துக்கொண்டார்.



கருணைக்கடலான நரசிம்மமூர்த்தி, பிரகலாதனை பார்த்து, நீ ஏன் தூணை காட்டினாய்?! துரும்பை காட்டியிருக்கக்கூடாதா எனகேட்க, ஏன் அப்படி கேட்கிறீர்கள்?! என்று பிரகலாதன் நரசிம்மரை கேட்க., தூண் என்பதால் இரணியன் அதை உடைக்கும்வரை காத்திருக்க வேண்டியதாயிற்று. துரும்பென்றால் அதை கிள்ள சொற்ப நேரமே ஆகி இருக்கும் நானும் சீக்கிரத்திலேயே பிரசன்னமாகி இருப்பேன். இவ்வளவு நேரம் கடந்திருக்காது. நீயும் அவஸ்தை பட்டிருக்க மாட்டாயல்லவா?! என்றாரம். ஆம், நாளை என்பதே நரசிம்மருக்கு இல்லை. அவரிடம் வைக்கும் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேறும். கேட்ட வரத்தை கேட்ட உடன் அளிக்க வல்லவன் இந்த நரசிம்மர்.


மனித உடலும் சிங்க முகமுமாய் உள்ள நரசிம்மமூர்த்தி சில திருத்தலங்களில் வித்தியாசமாகவும் காட்சி தருகிறார்.  திருவள்ளூர் மாவட்டம்அம்பத்தூர் வட்டத்திலுள்ள பொன்னியன்மேடு ன்ற திருத்தலத்தில் நின்ற கோலத்தில் அபய ஹஸ்தத்துடன் அருள்புரிகிறார்ஏழு அடி உயரத்தில் காட்சிதரும் இவர் நான்கு கரங்களுடன் திகழ்கிறார்.  
நாமக்கல் மாவட்டம் குடைவரைக்கோவிலில் நரசிம்மர் மூலவராக வீராசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். இரணியனின் வயிற்றை பிளந்த கைகள் என்பதால் சிவப்பு நீரோட்டத்துடனும், நகங்கள் ரத்தக்கறை சிவப்புடன் இருப்பதையும் தரிசிக்கலாம்
யோக நரசிம்மர், வீர நரசிம்மர், உக்கிர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், கோபநரசிம்மர், சுதர்சன நரசிம்மர், அகோர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், குரோத நரசிம்மர் என முக்கியமான 9 வகை நரசிம்ம வடிவங்களை வகைப்படுத்தி வணங்கினாங்க. இவைத் தவிர பஞ்சமுக நரசிம்மர், விஷ்ணு நரசிம்மர், ருத்ர நரசிம்மர்ன்னு தங்கள் அன்புக்கும், பக்திக்கும் ஏற்ப நரசிம்மரை பல வடிவங்களிலும் நரசிம்மரை வடிவமைத்து வணங்கினர் நம் முன்னோர். 


நரசிம்மர் விரத வழிபாட்டிற்கு உகந்த நேரம் அந்திசாயும் வேளையான மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை. இன்று நரசிம்ம ஜெயந்தி, சித்திரை மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில்  நரசிம்ம ஜெயந்தி வரும். அன்றைய தினம் விரதமிருந்து இந்த நேரத்தில் நரசிம்மரை வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். 
நரசிம்மருக்கு செவ்வரளி மாதிரியான சிவப்பு வண்ண மலர்கள், சர்க்கரைபொங்கல், பானகம் மற்றும் நரசிம்மரின் கோபத்தை தணிக்கும் குளுமையான பொருட்களை பூஜைக்கு கொடுக்கலாம். மேலும் நரசிம்மர், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதால், விஷ்ணுவுக்கு ஏற்ற மலர்கள், வஸ்திரம், நைவேத்தியம் ஆகியவற்றையும் நரசிம்மருக்கு படைத்து வழிபாடு செய்யலாம். 
இறைவனுக்கு உயிர்களை காக்க மட்டுமே தெரியும். அசுரக்குலத்தில் பிறந்து, பரம எதிரியின் மகனையே கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து காப்பாற்றும் கடவுள் நம்மை காப்பாற்ற மாட்டாரா?! அப்படி அவர் நம்மை காக்க என்ன செய்யனும்?! தவமிருக்கனுமா?! இல்ல விரதமிருக்கனுமா?! பூஜை?! அர்ச்சனை?!ம்ஹூம் எதுமே வேணாம். அபயம்ன்னு அவன் தாளில் முழுமையாய் சரணாகதி அடைந்தால் போதும். நம்மை காப்பான் இறைவன்.

நரசிம்ம மூல மந்திரம்..
‘ஓம் வஜ்ரநாகாய வித்மஹே
தீட்சண தன்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரஸிம்ஹாய ப்ரசோதயாத்’
எதிரி பயம் நீங்க, இனம்புரியா அச்சம், குழப்பம் விலக, ராஜ வாழ்க்கை கிட்ட, தொழிலில் தடை விலக நரசிம்மரை வழிபடுவோம்!
நன்றியுடன்,
ராஜி


7 comments:

  1. நரசிம்ம ஜெயந்தி வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. படங்கள் மிரட்டுகின்றன சகோ
    நரசிம்ம ஜெயந்தி வாழ்த்துகள்

    ReplyDelete
  3. நரசிம்ம ஜெயந்தி - படங்கள் நன்று.

    ReplyDelete