Saturday, December 08, 2018

அரசனைப்போல் வாழவைப்பான் அச்சன்கோவில் அரசன் - ஐயப்பனின் அறுபடைவீடுகள்


கார்த்திகை மாசம் ஐயப்பனுக்குரியது. ஊர் உலகமே அவன்பேர் சொல்லும்போது நாம மட்டும் சும்மா இருக்கமுடியுமா?! அதனால், ஐயப்பனின் அறுபடைவீடுகளை பார்த்துட்டு வந்திக்கிட்டிருக்கோம். அந்த வரிசையில் இன்னிக்கு   திருமணக்கோலத்தில் இருக்கும் அச்சன்கோவில் தர்மசாஸ்தா ஐயப்பனை  பத்தி பார்க்கலாம்.   ஐயப்பனை பிரம்மச்சர்ய கடவுளாதான் நமக்கு தெரியும். அதனால், பத்து வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் மற்றும் மாதவிடாய் சுழற்சி முடிந்த ஐம்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள்தான் ஐயப்பனை கோவிலில் தரிசிக்கனும்ன்னு விதிமுறைகள் இருக்கு, ஆனா, வீட்டைவிட்டு வெளில தங்கியிருக்கும் நம்ம பசங்களும், ஆன்சைட்டுக்கு வெளிநாட்டுக்கு போற பசங்களும் வீட்டுக்கு தெரியாம கல்யாணம் செஞ்சு குடும்பம் நடத்துற மாதிரி ஐயப்பன்,  நமக்கு தெரியாம, அச்சன்கோவிலில் குடும்பஸ்தனாய் இருக்கார்.   அதும் ஒன்றல்ல, இரண்டு மனைவியரோடு... ஐயப்பன் தம்பதி சமேதராய் இருக்கார்ன்னு சொன்னா என்னை லூசுன்னு கேலிப்பேசுவீங்க. ஆனா, அதான் உண்மை.  நான் லூசுங்குறதில்லை. ஐயப்பன் குடும்பஸ்தன்ற அந்த உண்மை என்னன்னு தெரிஞ்சுக்கலாம். 


பரம்பொருளின் மகனான ஐயப்பன் வழிபாடு தோன்றி  சுமார் 2000 வருசம்  ஆகிட்டுது.  சாஸ்தா வழிபாடு என்பது பாரததேசத்தில் மிகத் தொன்மையான ஒன்று. தென்னகத்தில்குறிப்பாக தமிழகத்திலும் மலையாள தேசத்திலும் இவ்வழிபாடு பரவலா காணப்படுது. ஹரிஹரபுத்திரனின் கதை நமக்கு தெரிஞ்சதுதான். ஆனா, நமக்கு தெரியாத சில செவிவழி கதைகளும் இருக்கு. 
ஐயப்பன் நமக்கு தெரியாம எப்ப கல்யாணம் கட்டிக்கிட்டார்?! எப்ப?!ன்ற பிராதுக்கு போறதுக்கு முந்தி, சபரிமலைக்கு போகவிரும்பும் நபர்கள் எதுக்கு துளசிமணிமாலை ஏன் போட்டுக்குறாங்க. சமயசின்னங்கள் எத்தனையோ இருக்க துளசிமணிமாலையை தேர்ந்தெடுக்க என்ன காரணம்ன்னு இன்னிக்கு பார்ப்போம்.   துளசி என்பது மகாவிஷ்ணுவுக்கு மிகவும் பிடித்தமானது. ஐயப்பனோ சிவவிஷ்ணு அம்சம்.   கடவுள் வழிபாட்டுக்குன்னு எத்தனயோ தாவரவகைகள் இருந்தாலும் துளசிக்குன்னு தனி மகத்துவமுண்டு.  துளசியில் லட்சுமி வாசம் செய்வதாய் ஐதீகம். இம்மாலை அணிந்தவர்களுக்கு சகல ஐஸ்வரியங்களும் கிடைக்குமென்பது நம்பிக்கை.  மகாவிஷ்ணுவின் பாதங்களில் சேவை செய்யும் வரம் வாங்கி வந்தாள்  துளசின்ற பதிவிரதை.  . துளசிக்கு, விஷ்ணுப்பிரியான்னும் இன்னொரு பேரு இருக்கு. துளசியை உடல், மனது சுத்தமில்லாத நேரத்துல தொடக்கூடாது.

தாயைப்போல பிள்ளைன்னு நம்மூர்ல சொல்வாங்க. சிவனும், மகாவிஷ்ணுவும் இணைந்து ஒரு மாபெரும் சக்தியாக உருவானவரே ஐயப்பன்.  அப்படி பார்த்தால் ஐயப்பனின் தாய் மோகினி உருக்கொண்ட விஷ்ணுபகவான். அதனால;, தாய்க்கு பிடித்தமான சுத்தமான துளசி செடியிலுள்ள தண்டை பக்குவப்படுத்தி செய்யப்பட்ட துளசிமணிகளையே மாலையாய் அணிந்து துளசிமணிமார்மனாய் அருள்புரிகிறார். ஐயப்பனின் தந்தைக்கு பிடிச்ச ருத்ராட்சமும் சிலசமயம் அணிவார். ருத்ராட்சம் துளசிமணிமாலையைவிட புனிதமானது.  பக்தர்கள் ருத்ராட்ச மாலையை அணிய தடையில்லை.   துளசியைப்போலவே பவித்ரமான பக்தியுடன் இருக்கனும்ன்னு உணர்த்தவே துளசி மாலை அணிந்து சபரிமலை செல்லும் பழக்கம் ஏற்பட்டது.  இதுக்கு அறிவியல்ரீதியாவும் இன்னொரு காரணமுண்டு. பொதுவா கார்த்திகை மாசத்துல மழை, குளிர்ன்னு வாட்டி எடுக்கும்.  அடர்ந்த வனப்பிரதேசமான சபரிமலையில் குளிர் எப்படி இருக்கும்ன்னு சொல்லவும் வேணுமா?! அவங்க உடலிலிருக்கும் வெப்பநிலையை சீராய் வைத்திருக்கவுமே துளசிமணிமாலை அணியப்படுது. சபரிமலைக்கு மட்டுமில்லை எந்த கோவிலுக்கும் விரதமிருக்கவுங்க துளசிமாலை போட இதுதான் காரணம். ஏன்னா, தலைக்கு குளிப்பது, பாய் படுக்கை தவிர்ப்பதுன்னு உடல்குளிர்ச்சி அடைய வாய்ப்புகள் உண்டு. அப்படி சளி, காய்ச்சல்ன்னு அவதிப்படக்கூடாதுன்னுதான் இந்த ஏற்பாடு.  ஏன்னா, துளசி உடலுக்கு உஷ்ணத்தன்மை கொடுக்கும்ன்னு பெரியவங்க சொல்வாங்க. 

ஒருமுறை அச்சன்கோவில் அழகனை காண்பதற்காக தள்ளாத வயதுடைய பக்தர் ஒருவர் தனியா வந்துக்கிட்டிருந்தார். அடர்ந்த காடுஇரவு நேரம்,  வழியும் சரியா தெரியலை. பக்தரின் மனதில் அச்சம் புகுந்தது. அச்சன்கோவில் அரசனுக்குஅந்த வயதானவரின் அச்சம் புலப்பட்டுவிட்டது. இதற்கிடையே அந்த வயதானவரும்        ஐயப்பனை நினைத்து, தன் பயத்தை போக்கும்படி வேண்டிக்கொண்டார். அப்போது  வானில் ஒரு அசரீரி கேட்டது. அன்பனே! இப்போது இவ்விடத்தில் வாள் ஒன்று தோன்றும். அந்த வாள் உனக்கு வழிக்காட்டும். அச்சன்கோவில் அடைந்ததும் அந்த வாளை எனது சன்னிதியில் கொடுத்துவிடு. அதுவரை யாரிடமும் எதுவும் பேசக்கூடாது’ என்றது அந்த அசரீரி. அதன்படியே அங்கு, தோன்றிய வாள் பவுர்ணமியை காட்டிலும் அதிக ஒளி காட்டியது. அந்த ஒளியின் மூலமாக காட்டுப்பாதையில் அந்த நள்ளிரவில் நடந்து வந்து கோவிலை அடைந்தார் முதியவர்.

மறுநாள் விடிந்ததும்அந்த வாளை கோவிலில் ஒப்படைத்துவிட்டு, அங்கிருந்தவர்களிடம் நடந்தவற்றை விளக்கி கூறினார். அப்போது கருவறையிலிருந்து  மீண்டும் அசரீரி ஒலித்தது. அன்பர்களே! அந்த வாளை எனது கருவறையில் வைத்து பூஜை செய்யுங்கள். என்றும் உங்களுக்கு அரணாக இருந்து காப்பேன்’ என்றது. அதன்படி அந்த வாள் மூலவர் சன்னிதியில் வைக்கப்பட்டது. தற்போது அச்சன்கோவில் அழகனின் திருவாபரணங்கள் வைக்கப்பட்டுள்ள புனலூர் கருவூலத்தில் அந்த வாள் வைக்கப்பட்டுள்ளது.
கொடிமரத்தை வணங்கி படியேறி மூலவர் ஐயப்பனை தரிசித்து விநாயகர்சுப்ரமணியர்நாகங்கள்மாம்பழத்தறா பகவதி அம்மன் சன்னிதிகளையும் வணங்கனும்.  பின்னர் கருப்பன் என்னும் கருப்பசுவாமியையும் தவறாமல் வழிபடனும். கருப்பந்துள்ளல்’ என்னும் விழா இங்கு பிரபலம். ஏவல்பில்லிசூனியம் மற்றும் மாந்திரீகம் போன்றவற்றாலோதீராத நோயாலோ அவதிப்படுபவர்கள்இந்த விழாவில் பங்கேற்றால் அனைத்து துயரங்களும் நீங்கப்பெறுவார்கள். இந்த விழாவின்போது பலரும் கருப்ப சுவாமிப்போல் வேடமணிந்து கலந்துக்குவாங்க. இத்தலத்தில் உள்ள அம்மன் சன்னிதியில் வளையல் மற்றும் பட்டுத்துணிகளுடன் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம். மேலும் அச்சன்கோவில் ஐயப்பனை வழிபட்டால் நம்மையும் அரசனைப் போல வாழவைப்பான்.


தமிழகத்தில் நெல்லை மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள கேரள மலைப்பகுதி. ஐயப்ப பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் அரசனாக ஐயப்பன் இங்குதான் வீற்றிருக்கிறார்.  இக்கோவிலில் பூர்ணபுஷ்கலாவுடன் ஐயன் காட்சியளிக்கிறார்.  பரசுராமர் பிரதிஷ்டை செய்த நான்கு கோவில்களில் இங்கு மட்டுமே அவர் பிரதிஷ்டை செய்த விக்கிரகம் இருக்கு. மற்ற தலங்களில் சேதமுற்று பின்னர் புதுசா உருவாக்கபட்டது. சபரிமலையைப்போல இங்கும் பதினெட்டு படிகள் உண்டு. இக்கோவிலின் சிறப்பு  ஒரு தங்க வாள். இது காந்தமலையிலிருந்து தேவர்களால் வழங்கப்பட்டதாக நம்பப்படுது. அதற்கு அடையாளமாக அந்த வாளில் காந்தமலைன்ற எழுத்துகள் இருக்காம். இந்த வாளின் சிறப்பம்சம் என்னவெனில் இதன் எடை எவ்வளவு என்று இதுவரை யாரும் கண்டறியமுடியாத விஷயம் என்பதுதான்!! இந்த வாள் தற்போது புனலூரில் அரசுக் கருவூலத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கு வைத்து எடை போட்டால் ஒரு எடையும் அச்சன்கோவிலில் வைத்து எடை போட்டால் ஒரு எடையும் காட்டுமாம். இதன் எடைஇடத்திற்கு இடம் வேறுபடுகிறது.

சபரிமலை போன்ற அடர்ந்த காட்டுக்குள்,  தன் தேவியரான பூரணைபுஷ்கலை உடன் வீற்றிருந்து அருளும் இடம்தான் அச்சன்கோவில். இங்கு ஆண்களுடன் அனைத்து வயதுப் பெண்களும் ஐயப்பனை தரிசிக்க அனுமதி உண்டு. அச்சன்கோவிலில் தனது தேவியருடன் வீற்றிருக்கும் ஐயப்பன்,  சங்கரன்கோவில் சங்கரநாராயணரைப் பார்த்தவண்ணம் உள்ளார். சபரிமலையில் பால்ய பருவத்தில் காட்சி தரும் ஐயப்பன்குளத்துப்புழாவில் குழந்தைப் பருவத்திலும்ஆரியங்காவில் இளைமைப் பருவத்திலும்அச்சன்கோவிலில் முதிர்ச்சிப்பருவத்திலும் காட்சி தருகிறார். அச்சன்கோவிலின் அரசனாக ஐயப்பன் தனித்தோரணையுடன் மிடுக்காக அமர்ந்துள்ளார். வலக்கரம் அருகில் கூர்மையான வாள் ஒன்றும் உள்ளது. ஐயப்பனின் இருபுறமும் அவரது தேவியர் பூரணையும்புஷ்கலையும் அமர்ந்திருக்கஐயப்பனின் இந்த அழகு வர்ணிப்புக்குள் அடங்காதது.

அச்சன்கோவில் ஐயப்பனை வழிபட்டால் நம்மையும் அரசனைப் போல வாழவைப்பான். அச்சன் கோவிலில் ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடைப்பெறும் மண்டல மகோத்சவம்’ இப்பகுதியில் வெகுபிரசித்தம். இவ்விழா தொடங்குவதற்கு முந்தைய நாளன்று திருவாபரணப் பெட்டி ஊர்வலம் நடைபெறும். புனலூர் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள ஐயப்பனின் திருவாபரணங்கள் அப்போது எடுத்து வரப்படும். பெட்டிக்குள் நவரத்தின ஆபரணங்கள்தங்க ஆபரணங்கள்வாள் முதலியன இருக்கும். 
அச்சன்கோவில் திருஆபரணப்பெட்டி ஊர்வலம்
இந்த ஊர்வலம் புனலூர் கிருஷ்ணன் கோவிலிலிருந்து தொடங்கும். பின்னர் தென்மலைஆரியங்காவு வழியாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வழியா தென்காசி காசிவிசுவநாதர் கோவிலுக்கு வந்துச்சேரும். அங்கு திருவாபரண பெட்டிக்கு சிறப்பு பூஜை போடப்படும். பின்னர் அங்கிருந்து ஊர்வலம் பண்பொழி முருகன் கோவில் சென்றுமேக்கரை வழியாக மலைப்பாதையில் முன்னேறி அச்சன்கோவில் சென்றடையும். ஐயப்பனுக்கும்பூரணைபுஷ்கலை தேவியர்களுக்கும் திருவாபரணங்கள் பூட்டிய பின்னரே மகோத்சவம் தொடங்கும். அச்சன்கோவில் ஐயப்பன்பரசுராமரால் நிர்மாணிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இத்தல ஐயப்பனை கல்யாண சாஸ்தா’ என்றும் அழைக்கிறார்கள்.  இது விஷம் தீண்டாப்பதின்ற சிறப்பு கொண்ட தலம்.  பாம்புக் கடிபட்டு வருபவர்களுக்குஎந்த நடுஇரவானாலும்கோவில் நடை திறந்து சந்தனமும்தீர்த்தமும் வழங்கும் வழக்கம் இந்த ஆலயத்தில் உள்ளதாம்.
தங்கவாள் தரிசனம்
ஆண்டுதோறும் தைமாதம்ரேவதி நட்சத்திர தினத்தன்று நடைபெறும் மகாபுஷ்பாஞ்சலி [பூச்சொரிதல்] மிகவும் பிரசித்தி பெற்றது. அதற்காகத் தமிழகத்திலிருந்து இரண்டு லாரி மலர்கள் கொண்டுவரப்பட்டு ஐயப்பனுக்கும் அம்பாள்களுக்கும் விசேஷ புஷ்பாபிஷேக வைபவம் நடைபெறும். வண்ணவண்ண மலர்க்குவியல்களுக்கிடையே பகவானைக் காண்பது கண்கொள்ளாக்காட்சி. திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில்கேரளா மாநிலத்தின் வனப்பகுதியில் அமைந்துள்ளது அச்சன்கோவில் திருத்தலம். இந்த ஆலயத்திற்குச் செல்வதற்கு செங்கோட்டையில் இருந்து பஸ் வசதிகள் இருக்கு. 

மண்டல மகோத்சவம்
(பத்ம தளம்) ராஜவம்சம் கி.பி. 904-ல் உருவானது. மதுரையில் நிலைக்கொண்ட பாண்டிய அரசர்கள்சோழர்கள் மற்றும் பல எதிரிகளின் தாக்குதல்களால் சிதறுண்டுஅதில் ஒரு பகுதிதங்கள் ராஜ்ய விசுவாசிகள் வலுவாக இருந்த தென்பாண்டி - கேரள எல்லைகளில் குடியேறினார்கள். செங்கோட்டைஇலத்தூர்பூஞ்சார்பந்தளம் ஆகிய இடங்களில் பாண்டிய ராஜவம்சம் குடியேறியது. தங்கள் பாண்டியவம்ச திலகமாக விளங்கிய சபரிமலை சாஸ்தாவையே அண்டி ஒரு கிளை உருவானது. பத்து பகுதிகளை உள்ளடக்கிய ராஜ்ஜியமாக அது விளங்கியதால்பத்து தாமரை இதழ்களை உருவகித்துபத்மதளம்ன்ற பெயர் அதற்கு விளங்கியது. இதுவே, பின்னாளில் பந்தளம் என்றானது. சபரிமலை சாஸ்தாவைப் போற்றி உருவான, பாண்டிய ராஜபரம்பரை நாளடைவில் பந்தள ராஜவம்சம் என்றே அறியலாயிற்று.

பத்தாம் நூற்றாண்டு சமயத்தில் தென்தமிழக கேரளப் பகுதிகளில் குழப்பமான சூழ்நிலையே விளங்கியது. சபரிமலைஅச்சன்கோவில் பகுதிகளே அன்றைய தமிழக - கேரள எல்லைப்பகுதியாகவும்,  வியாபாரிகள் செல்லும் முக்கியமான வழியாகவும் இருந்தது. ஆனா,  அங்கிருந்த மக்களெல்லாம், உதயணன் என்றொரு கொள்ளையனுக்கு பயந்து வாழவேண்டிய நிலை உருவானது. எல்லைப்பகுதிகளைக் கடக்கும் மக்களை தாக்கி, கொலை கொள்ளைகளை சர்வசாதாரணமாக நடத்தி வந்தான் உதயணன். அவனுக்கென ஒரு கொள்ளைக் கூட்டமும் உருவானது. தமிழக எல்லையில் தொடங்கிய அவனது கொட்டம்மெல்ல மெல்ல கேரளத்துக்குள் புகுந்துதலைப்பாறைஇஞ்சிப்பாறைகரிமலை என பந்தளத்தின் காடுகளில் கோட்டையை கட்டிக் கொண்டு காட்டரசனாக வாழுமளவுக்கு முன்னேறியது.
சபரிமலை தர்மசாஸ்தா கோவில்,  அந்தகாலத்தில் தமிழக - கேரள பக்தர்கள் இருசாராரும் வந்து வழிபடும் கோவிலாகவும்வியாபாரிகள் தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் பாதையாகவும் விளங்கியது. வெற்றி போதை தலைக்கேறிய உதயணன்சபரிமலையிலும் தன் வெறியாட்டத்தை நடத்தி கோவிலைக் கொள்ளையிட்டான். அதனை தடுக்க வந்த நம்பூதிரியையும் கொன்றுசாஸ்தா சிலையையும் உடைத்து நொறுக்குகிறான். வெறி தலைக்கேறகோவிலையும் தீக்கிரையாக்குகிறான். இந்த சமயத்தில்,  அங்கேயில்லாம வெளிய போயிருந்த அந்த பூஜாரியின் மகன் ஜயந்தன் நம்பூதிரி அங்கு திரும்பி வருவதற்குள் எல்லாம் முடிந்து விடுகிறது. இந்த கொடூர சம்பவங்களைக் கண்டு கொதித்த ஜயந்தன்உதயணனை பழிவாங்கவும்மீண்டும் சபரிமலைக் கோவிலை உருவாக்கவும் சபதம் மேற்கொண்டான்.
தன் சபதத்தை நிறைவேற்ற போர்க்கலைகளை வெறியுடன் கற்றறிந்தான் ஜயந்தன். சுற்றியுள்ள பல சிற்றரசர்களையும்ஜமீந்தார்களையும் கண்டு உதயணனின் கொட்டத்தை அடக்க படைகளை கொடுத்து உதவுமாறு வேண்டினான். ஆனால் உதயணனுக்கு பயந்து யாரும் அவனுக்கு உதவ முன்வரவில்லை. இதனால் மனமுடைந்த ஜயந்தன்யாராலும் எளிதில் அடையமுடியாதபொன்னம்பலமேடு பகுதியில் ஒரு குகையில் வசிக்கலானான். மனிதர்கள் கைவிட்டுவிட்ட நிலையில் தன் முயற்சிக்கு உதவவேண்டி சாஸ்தாவை நோக்கி தவமிருந்தான். சபரிமலை கோவிலையே தரைமட்டம் ஆக்கிவிட்டதனால் தலைகால் புரியாத உதயணன்தன்னைத்தானே ஒரு அரசன் என்று கருதிக் கொண்டான். ஒரு முறை பந்தளம் பகுதிக்கு வந்த அவன்அந்நாட்டின் இளவரசியைக் கண்டான்இளவரசியை மணந்து கொண்டால்வெறும் கொள்ளைக்கூட்டத் தலைவனான தான்அரச பரம்பரையில் இணையலாம் என்ற எண்ணத்தில் இளவரசியை பெண் கேட்டு ஆள் அனுப்பினான். ஆனால் பந்தள மன்னர் அதனை கௌரவமாக மறுத்து விட்டார். இதனால் அவமானமுற்ற உதயணன்அரண்மனையைத் தாக்கிஇளவரசியையும் கடத்திக் கொண்டு சென்று விட்டான். அவளை கரிமலையில் உள்ள தன் கோட்டையில் சிறை வைத்துஒரு மாதத்துக்குள் மனத்தை மாற்றிக் கொள்ளும்படி கெடுவைக்கிறான். இந்நிலையில்சிறைபட்டிருந்த இளவரசியின் கனவில் தர்மசாஸ்தா தோன்றிகவலைப்பட வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார். அதேசமயம் பொன்னம்பல மேட்டில் தங்கியிருந்த ஜயந்தனின் கனவிலும் தோன்றிஇளவரசியைக் காப்பாறுமாறும்அதன் பின்னர் தனது சக்தியே அவனுக்கு மகனாக தோன்றி அவன் லட்சியத்தை நிறைவேற்றும் என்றும் கூறுகிறார்.

இந்த கொள்ளைக்கூட்டம் அசந்திருந்த நேரம் பார்த்து திடீரென தாக்குகிறான் ஜயந்தன். போர்க்கலையில் வல்லவனான ஜயந்தன் எளிதில் இளவரசியை காப்பாற்றிக் கூட்டிச் செல்கிறான். ஆனால் 21 நாட்கள் காணாமல் போன ஒரு பெண்ணைஇறந்தவளாகக் கருதி அரண்மனையில் இறுதி சடங்குகளை முடித்து விடுகிறார்கள். வேறு வழியில்லாத ஜயந்தன்தானே அவளை மணந்து கொண்டுயாராலும் அடையாளம் காண முடியாத காட்டுப் பகுதியில்(இன்றைய பொன்னம்பலமேடு) வசிக்கிறார்கள். கடுந்தவமும், தியானமும் கொண்ட தம்பதிகளின் மனதில் எப்போதும் ஒரே எண்ணம்தான். உதயணனை அழித்துசபரிமலைக் கோவிலை மீண்டும் உண்டாக்கும்படியான ஒரு மகனை அளிக்கும்படி தர்மசாஸ்தாவை வேண்டியபடியே இருந்தார்கள்.

விரைவில் இளவரசி கருவுற்றாள். அவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. சபரிமலை ஐயப்பனின் அருளால் பிறந்த குழந்தை என்பதனால்அக்குழந்தைக்கு "ஆர்யன்" என்ற பெயர் சூட்டினார்கள். (ஆர்யன் என்பது சாஸ்தாவின் நான்கு முக்கியமான பெயர்களில் ஒன்றுமரியாதைக்குரியவன் என்று பொருள்). தன் லட்சியத்தை நிறைவேற்றப்போகும் தவப்புதல்வன்ற எண்ணத்தில் ஜயந்தன்மிகச்சிறிய வயதிலேயே தன் மகனுக்கு ஆன்மீகம்அரசியலோடுபோர்க்கலைகளையும் கற்றுக் கொடுத்தான். ஆச்சர்யப்படும் விதத்தில்பாலகனான அச்சிறுவன் ஆன்மீக அறிவில் அபரிமிதமான ஞானத்துடனும்அதே சமயம் சண்டைப்பயிற்சியில் வெல்ல முடியாத வீரனாகவும் விளங்கினான். ஆர்யன் ஒரு சாமான்ய பிறவியல்ல என்பதை அவன் தாய் தந்தையர் வெகு விரைவில் உணர்ந்து கொண்டார்கள்.

இனியும் அவனை இந்த காட்டில் வைத்திருப்பது சரியாகாதென முடுவெடுத்த ஜயந்தன்பந்தள மன்னனுக்கு ஒரு கடிதம் எழுதிஆர்யனை அரண்மனைக்கு அனுப்பி வைத்தான். ஆர்யனின் மாமனான பந்தள மன்னன்கடிதத்தில் வாயிலாக எல்லா உண்மைகளையும் அறிந்தான். இறந்துவிட்டதாக கருதிய தன் சகோதரி இன்னும் உயிருடன் இருப்பதையும்அவள் பிள்ளை கண்முன் வந்திருப்பதையும்கண்டு பெருமகிழ்ச்சி கொண்டான். ஆர்யனின் தோற்றப் பொலிவே அபாரமாக இருந்ததுயாருக்கும் அவன் சிறுவன் என்ற எண்ணமே தோன்றவில்லை. மாறாக மரியாதையே ஏற்பட்டது. அரண்மனையிலேயே தங்கிய ஆர்யன்அரண்மனை வீரர்களையும் மல்லர்களையும் சர்வசாதாரணமாக வென்றது மன்னரிடத்தில் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியது. தன் படையின் முக்கியமான தலைமைப் பொறுப்பினை ஆர்யனுக்குக் கொடுத்தான் மன்னன்.
அரண்மனையின் வளர்ந்து வந்த ஆர்யன்தன் செயற்கரிய செயல்களால் அனைவர் மனத்தையும் வென்றான். அரசனும்தனக்கு பிறகு பந்தள நாட்டை ஆளும் தகுதி ஆர்யனுக்கே உள்ளது என முடிவு செய்துஅவனையே இளவரசனாக அடையாளம் காட்டினான். அரச பிரதிநிதியாக நாட்டை ஆளும் பொறுப்பையும் அனைத்து அதிகாரங்களையும் ஆர்யனுக்கே அளித்தான். அத்துடன் அரச அதிகாரம் கொண்டவன் என்ற முறையில் "கேரள வர்மன்" என்ற அரச பட்டத்தையும் அளித்து, "ஆர்ய கேரள வர்மன்" என்று போற்றினான். மக்கள் அனைவருக்கும் எளியனாக விளங்கிய ஆர்யனைஎல்லோரும் ஐயன் - ஐயப்பன் என்றே செல்லமாகவும்மரியாதையாகவும் அழைத்தார்கள். (இது ஏற்கனவே சபரிமலையில் உள்ள தர்மசாஸ்தாவின் மற்றொரு பெயர்தான். அந்த காலகட்டத்தில் ஐயப்பன் என்பது ஒரு செல்லப்பெயர்) அரசாட்சியில் முழுமையாக ஈடுபட்டு நாட்டை செம்மை படுத்திய ஐயப்பன்அவ்வப்போது சபரிமலைக் காட்டுக்குத் தனிமையை நாடிச் சென்றுதன் பிறவியின் லட்சியத்தை எண்ணி தியானம் செய்து பொழுதை கழிக்கலானார்.
பாண்டிய அரசபரம்பரையின் மற்றொரு கிளைவம்சமான பூஞ்சாறு ராஜ்யவம்சத்து அரசனான மானவிக்ரம பாண்டியன்வண்டிப்பெரியாறு வனப்பகுதிக்கு வந்தபோதுஉதயணனின் படை மானவிக்ரமனைச் சூழ்ந்துகொண்டது. தன்னால் ஆனமட்டும் போராடிய மானவிக்ரமன்ஒரு கட்டத்தில் ஏதும் செய்யமுடியாமல்மீனாட்சியம்மனை வேண்டி நின்றான். வெகுவிரைவிலேயேஅவன் வேண்டுதல் பலித்ததைப்போல ஒரு இளைஞர் யானைமேல் வந்துக்கொண்டிருந்தார். வனத்தில் திரிந்துக்கொண்டிருந்த காட்டானை ஒன்றை அடக்கி அதன்மேல் வந்து கொண்டிருந்தது -  ஐயப்பன்தான். தன் அநாயாசமான போர் திறமையால் கொள்ளையர்களை விரட்டியடித்த ஐயப்பன்மானவிக்ரமனை காப்பாற்றினார். மீண்டும் தைரியமாக அரண்மனைக்கு செல்லும்படி கூறிய ஐயப்பன்அரசனுக்கு துணையாகதன் பிரதிநிதியாக ஒரு பிரம்பு- வடியை கொடுத்து அனுப்பினார்.  (இன்றும் பூஞ்சாறு ராஜ வம்சம் இதனை ஒரு பொக்கிஷமாக காப்பாற்றுகிறார்கள்)

இப்படியாக பதினான்கு வயதுக்குள் ஐயப்பன், தானொரு போர்வீரனாகவும்யோகியாகவும் விளங்கி தான் சாதாரணமான மனிதனல்ல என உணர்த்திவிட்டார். எனவே தன் பிறவி லட்சியத்தை நிறைவேற்ற வேளை வந்துவிட்டதை உணர்ந்தார். உதயணனை அழிக்கவும்சபரிமலை கோவிலை மீண்டும் உருவாக்கவும் - பந்தளத்தின் படைபலம் போதாதுஎனவே பெரும் படை ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டார் ஐயப்பன். நாட்டின் குடிமக்கள் அனைவரும் வீட்டிற்கு ஒருவரை போருக்கு அனுப்ப அறைகூவல் விடுத்தார். இதற்காக அண்டை நாடுகளுக்கும் சென்று ஐயப்பன் படை திரட்ட முடிவு செய்தார். காயங்குளம்அம்பலப்புழைசேர்த்தலைஆலங்காடு போன்ற கேரளப் பகுதிகளுக்கு மட்டுமல்லாமல்தமிழகத்தின் பாண்டிய நாட்டின் உதவியையும் வேண்டி ஐயப்பன் பயணம் செய்ய திட்டமிட்டார்.
முதன்முதலில் ஐயப்பன் காயங்குளம் அரண்மனைக்கு சென்றார். காயங்குளம் அரசர்தான் தினம் தினம் கேள்விப்படும் தெய்வப்பிறவியை நேரில் கண்ட மகிழ்ச்சியில் மெய்மறந்து நின்றார். தன்னால் இயன்ற எல்லா உதவிகளையும் செய்வதாக வாக்களித்தார் மன்னர். காயங்குளம் ராஜ்யத்திலிருந்த பல களரி வீரர்களையும்போர் வீரர்களையும் கொண்டு ஐயப்பன் ஒரு போர்ப்படையை தயாராக்கினார்.ஐயப்பன் காயங்குளத்திலிருந்து கிளம்புமுன்பே ஒரு தூதன் வந்துகடல் கொள்ளையனான வாவர் என்பவனின் தொல்லைகளைப் பற்றி எடுத்துரைத்தான். இதனைக் கேட்டு மகிழ்ந்த ஐயப்பன்உற்சாகமாக போருக்கு கிளம்பினார். முல்லசேரி என்ற குடும்பத்தின் தலைவனாக விளங்கிய கார்னவர்(தலைவர்)காயங்குளத்தின் மந்திரியாகவும் விளங்கிய அவர் ஐயப்பனுக்கு துணையாக புறப்பட்டர். நடந்த சண்டையில் வாவரை வென்றார் ஐயப்பன். வாவரின் உடலை மட்டுமல்லாமல் உள்ளத்தையும் வென்றது ஐயப்பனின் பண்பு. வாவரை நல்வழிப்படுத்தி தன் சீடனாகவும்தோழனாகவும் ஏற்ற ஐயப்பன்வெகு விரைவில் படைகளை திரட்டலானார்.

புல்லுக்குளங்கரா என்ற இடத்தில் தன் முதல் போர்ப்படை கூட்டத்தை கூட்டிபடை வீரர்களிடையே சொற்பொழிவாற்றினார். (இந்த இடமும் இன்னும் இருக்கிறது). இதே போல அம்பலப்புழை சேர்த்தலை போன்ற ஊர்களிலும் படைகலை திரட்டினார். நாட்டில் எங்கெங்கு சிறந்த வீரர்கள் இருக்கிறார்களோஅவர்களெல்லாம் ஐயப்பனுக்கு கட்டுப்பட்டு வந்தார்கள். மலைகளில் புகுந்து தாக்குவதில் வல்லவனான கடுத்தன் என்ற வீரனிடம்  ஐயப்பனின் பார்வை பட்டது. பலமுறை உதயணனைத் தாக்கிசிறைபட்ட பல மன்னர்களை மீட்டுள்ள கடுத்தனை தன் லட்சியத்துக்கு துணையாக அழைத்தார் ஐயப்பன். அதே போல வில் வித்தையில் சிறந்து விளங்கிய ராமன் - க்ருஷ்ணன் என்ற இருவரும் (தலைப்பாறை வில்லன் - மல்லன்) ஐயப்பனுக்கு துணை நின்றார்கள்.

சேர்த்தலை எனும் ஊருக்கு வந்த ஐயப்பன்அங்கே களரி எனும் யுத்தப்பயிற்சி தந்த சிறப்பன்சிறா மூப்பன் என்பவரை சந்தித்து அவரது ஆதரவையும் பெற்றார். மூப்பனின் மகள்கட்டிளம் காளையான ஐயப்பன் மேல் காதல் கொண்டாள். இதனை அறிந்த ஐயப்பன் அவளிடம் தன் வாழ்கை லட்சியத்தை எடுத்துரைத்து அவள் மனதை மாற்றினார். யோகியான ஐயப்பனின் அறிவுரை அவளை ஆன்மீக ரீதியாக பக்குவப்படுத்தியது. இதற்கிடையில் ஐயப்பனின் படைபலம் பெருகிக்கொண்டே வந்தது.உதயணனுக்கு எதிராகஐயப்பன் தன் படைகள் முழுவதையும் எருமேலியை நோக்கி திரட்டினார். எருமேலியிலிருந்து வாவரின்  தலைமையில் முதல் தாக்குதல் துவங்கியது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த உதயணன் மூப்பனின் பெண்ணை தந்திரமாக கடத்திக் கொன்றுவிட்டான். உடனடியாக தன் படைகள் முழுவதையும் திரட்டிய ஐயப்பன்படைவீரர்கள் அனைவருக்கும் எருமேலி முதல் சபர்மலை வரையிலான மலைகளின் மகத்துவத்தை உரைத்தார். முறையான விரத அனுஷ்டானம் இல்லாமல் சாஸ்தாவின் பூங்காவனத்துக்குள் செல்லக் கூடாது என கட்டளையிட்டார்.

ஐயப்பனின் கட்டளைப்படி படைவீரர்கள் அனைவரும் 56 நாட்கள் கடுமையான விரதம் மேற்கொண்டார்கள். இதன் பின்னர் அனைவரும் மீண்டும் எருமேலியில் கூடினார்கள். தங்கள் வெற்றிக்காக கிராத சாஸ்தாவை வழிபட்ட ஐயப்பன்போர்ப்படைகளை வழிநடத்தலானார். தாக்குதல் குறித்து யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்ககாட்டுவாசிகளைப் போல வேடமிட்டு யாவரும் செல்லலானார்கள். (இன்றைய பேட்டை துள்ளல்அன்று கடைசியாக வந்த ஆலக்காட்டு படையின் நினைவாக இன்றும் ஆலங்காட்டு பேட்டை துள்ளலே கடைசி பேட்டை துள்ளல்) உதயணனைத் தாக்கும் முன்பு போர்ப்படைகளை மூன்றாக பிரித்தார் ஐயப்பன்.


ஆலக்காட்டு படைகளை வாவரின் தலைமையிலும், அம்பலப்புழை படைகளை கடுத்தனின் தலைமையிலும், பந்தளப்படைகளை வில்லன் - மல்லன் இருவரின் தலைமையிலும் அணிவகுத்தார். மூன்று படைகளுக்கும் தலைமைப் பொறுப்பை ஐயப்பன் தானே ஏற்றார். உதயணனின் இருப்பிடத்தை கிழக்குவடக்கு தெற்கு என மூன்று பக்கங்களிலிருந்தும் வளைக்கலானார்கள். லட்சியம் வென்றது.  எருமேலியிலிருந்து பூங்காவனத்துக்குள் நுழைந்தது முதலாகவே ஐயப்பன் முற்றிலும் வேறொரு நபராக காட்சியளித்தார். அவரது தோற்றமே மிகப் பொலிவுடன் காணப்பட்டதுமுகத்தில் ஒரு மெல்லிய புன்னகை தவழ  மிக அமைதியான கோலத்துடன்அதே சமயம் ஆனந்தக் கோலத்துடன் முன்னேறினார். ஐயப்பன் ஒரு ஆயுதத்தையும் கையால் கூட தொடவில்லைஅவர் முன்னேற முன்னேற அவரைத் தொடர்ந்து சென்ற படைகளும் எதிரிகளை எளிதாக வீழ்த்தி வெற்றிகளைக் குவித்த வண்ணம் முன்னேறியது.  உதயணனின் கொள்ளைப்படைகளின் கூடாரமாக இருந்த இஞ்சிப்பாறைகரிமலைஉடும்பாறை ஆகியவை வெகுவிரைவிலேயே ஐயப்பன் படையின் வசமானது. ஐயப்பனின் வீராவேசமான படைகளுக்கு முன் உதயணனின் படைகளால் நிற்கவே முடியவில்லை. ஐயப்பனின் படை வெகு வேகமாக முன்னேறி உதயணனின் படைகளை தவிடுபொடியாக்கியது. இறுதியாக கரிமலைக் கோட்டையில் தஞ்சம் புகுந்தான் உதயணன். கடுமையானதொரு யுத்தத்துக்குப் பிறகு கடுத்தன் ஆக்ரோஷமாக முன்னேறி உதயணனின் கழுத்தை வெட்டி வீழ்த்தினான். ஐயப்பனின் லட்சியம் நிறைவேறியது.


பல்லாண்டுகால போராட்டத்தின் வெற்றிக்குப்பிறகு படைகள் முழுவதும் ஆனந்தமாக பம்பையாற்றங்கரையில் கூடினார்கள். ஐயப்பன் அங்குபோரில் இறந்த அனைவருக்கும் இறுதிச்சடங்குகள் செய்து தர்ப்பணம் செய்யச் சொன்னார். எதிரியே ஆனாலும்உதயணனின் ஆட்களுக்கும் தர்ப்பணம் செய்யப்பட்டது. மேற்கொண்டு படைகள் அனைவரும் நீலிமலையைக் கடந்து செல்லத்துவங்கினார்கள். அப்போது அனைவரையும் நிறுத்திய ஐயப்பன்ஆலயப்பகுதிக்குள் ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது எனக்கூறிஅம்புகத்திகதை என எல்லா ஆயுதங்களையும் ஓர் ஆலமரத்தின் கீழே வைத்துவிடச் சொன்னார். (பண்டைய சரங்குத்தி ஆல்)  வீர விளையாட்டின் முடிவுபின்னர் ஐயப்பனும் மற்ற படை வீரர்களும் சபரிமலை கோவிலுக்குச் சென்றார்கள். அங்கே அவரது தந்தை ஜயந்தனும் மற்றவர்களும் புதிய விக்ரஹத்துடன் காத்திருந்தார்கள். சபரிமலையை அடைந்ததும் ஐயப்பன் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பூரண மௌனத்தில் ஆழ்ந்திருந்தார். ஆலய நிர்மாணம் முடிந்து ப்ரதிஷ்டைக்கு தயாராகும் வரை ஐயப்பன் ஓரிடத்தில் அமர்ந்து த்யானத்தில் ஆழ்ந்திருந்தார்(இன்றைய மணிமண்டபம்) தனுர்மாதம் (கார்த்திகை) முடிந்து தைமாதம் துவங்கும் வேளையில் புதிய விக்ரகம் பிரதிஷ்டை செய்ய வேளை குறிக்கப்பட்டது. புதிய பிரதிஷ்டையை ஐயப்பன் தானே தன் கையால் நடத்தினார்.  பக்தர்கள் பரவசத்துடன் இதனை தரிசித்துக் கொண்டிருக்கும் வேளையில்பொன்னம்பல மேட்டில் ஓர் ஒளி தோன்றியது. மறு கணம்ஆலயத்துள்  ஆர்ய கேரள வர்மனைக் காணவில்லை. இத்தனை நாள் தங்களுடன் இருந்த தங்கள் அன்புள்ளபாசமுள்ளகருணையுள்ள இளவரசன்  -ஆர்யன் ஐயப்பன்- சாக்ஷாத் அந்த ஐயப்பனே ! என்று உணர்ந்து மெய்மறந்து சரண கோஷம் செய்தார்கள். பந்தளம் ராஜ வம்சம்பூஞ்சார் அரண்மனைமற்ற பல குடும்பங்கள் இன்றும் இந்த வரலாற்றுக்கு சான்றாக இருக்கிறார்கள். பல பொருட்களும்இடங்களும்பாடல்களும் இன்னும் கண்முன் இருக்கத்தான் செய்கிறது.
அடுத்தவாரம் குளத்துப்புழாவிலிருந்து சந்திக்கலாம்...
நன்றியுடன்,
ராஜி.

6 comments:

  1. நம்பும் நம்பாத சில அரைவேக்காடுகள் தான் லூசுகள் என்று சமீபத்தில் தெரிந்து கொண்டேன் சகோதரி...

    பேட்டை துள்ளல், அனுபவித்துள்ளேன்...

    ReplyDelete
    Replies
    1. இப்ப என்னண்ணே சொல்ல வர்றீங்க?! நான் லூசா இல்லியா?!

      உணர்ந்தால் கடவுள், இல்லன்னா வெறும் கல்லுதான்.

      Delete
  2. சுவையான விவரங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete