Friday, September 15, 2017

சின்ன கண்ணம்மா - 800வது பதிவு

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே!
நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில் கலந்தாய் என் உயிரே!
உன் பூவிழி குறுநகை
அதில்ஆயிரம் கவிதையே...

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே!
நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில் கலந்தாய் என் உயிரே!

வானம் தாலாட்ட மேகம் நீராட்ட
வளரும் வெள்ளி நிலவே!
வாழ்வில் நீ காணும் சுகங்கள்
நூறாக வேண்டும் தங்கச் சிலையே!
தாயின் மடிசேரும் கன்று போல
நாளும் வளர்வாய் என் மார்பிலே!
சேய் உன் முகம் பார்க்க துன்பம் தீரும்
காலம் கனியாகும் தேவியே!
சிறுகிளி போல் பேசும் பேச்சில்
என்னை மறந்தேன் நானம்மா...
எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே!

கனவில் நினைவாக நினைவில் கனவாக
கலந்தாள் காதல் தேவி...
உறவின் பலனாக கடலில் அமுதாக
பிறந்தாய் நீயும் கனியே!
காணக் கிடைக்காத பிள்ளை வரமே!
கண்ணில் ஜொலிக்கின்ற வைரமே!
கோடி கொடுத்தாலும் உன்னைப் போல
செல்வம் கிடைக்காது வாழ்விலே!
புள்ளி மானே தூங்கும் மயிலே!
என்னை மறந்தேன் நானம்மா....

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே!
நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில் கலந்தாய் என் உயிரே!
உன் பூவிழி குறுநகை
அதில்ஆயிரம் கவிதையே!

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே!
நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில் கலந்தாய் என் உயிரே!



தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..

சின்னவளுக்காக..... இது 800வது பதிவும்கூட... 
அன்புடன்,
ராஜி. 

17 comments:

  1. அடடே வாழ்த்துகள் சகோ விரைவில் 1000 தொடவும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. Super song..பகிர்வுக்கு நன்றி ! 800 - பதிவுகள் என்னும் மைல்கல் அடைந்தமைக்கு வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. எனக்கு பிடிச்ச பாட்டு சகோ. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

      Delete
  3. 800 வது பதிவுக்கு வாழ்த்துகள். உங்கள் சின்ன மகளுக்கு எங்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோ

      Delete
  4. மேலும் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஆஹா...800 வது பதிவு ...வாழ்த்துகள் ....

    கவிதையும் அருமை ராஜிக்கா...


    வாழ்வில் நீ காணும் சுகங்கள் நூறாக
    வேண்டும் தங்க சிலையே... அழகு வரிகள்..

    ReplyDelete
    Replies
    1. கவிதை இல்லம்மா. சினிமா பாட்டு. கார்த்திக் நடிச்ச சின்ன கண்ணம்மா படத்திலிருந்து...

      Delete
  6. 800 வது பதிவுக்கும் ,இனிமையான பாடலுக்கும் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
    Replies
    1. என் ஆல்டைம் ஃபேவரிட்ண்ணே

      Delete
  7. வாழ்த்துகள் பதிவுகள் தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ

      Delete
  8. 800ஆவது பதிவு. அபார முயற்சி. மனதில் நிற்கும் கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. நான் எழுதின கவிதை இல்லப்பா. சினிமா பாட்டு.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

      Delete
  9. ஆஹா! 800 வது பதிவா!! வாழ்த்துகள்! உங்கள் செல்லத்திற்கும்!!! மனமார்ந்த வாழ்த்துகள்!

    ReplyDelete