Friday, September 07, 2018

20 வகை பிரதோசம் - அறிவோம் ஆன்மீகம்


தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து அமிர்தம் வேண்டி வாசுகி பாம்பை கயிறாக்கி, மந்திரகிரி மலையை மத்தாக்கி பாற்கடலை கடைய, வலிதாங்காம வாசுகி பாம்பு நஞ்சினை கக்க, அந்த நஞ்சு, அனைவரையும் அந்த நஞ்சு துரத்த, உயிர் பயம் கொண்டு அங்குமிங்கும் ஓடிய முப்பத்தும்முக்கோடி தேவர்களும், கைலாயம் சென்று சிவப்பெருமானை வேண்ட, அந்த நஞ்சினை உருட்டி உருண்டையாக்கி விழுங்கினார். உலகை காக்க இறைவன் நஞ்சினை விழுங்க, கணவனை காப்பாற்ற நினைத்த உமாதேவி, சிவபெருமானது தொண்டையினை அழுத்தி பிடித்தார். ஆலகால விசம் சிவபெருமான் தொண்டையிலேயே நின்றது. அன்றிலிருந்து சிவபெருமான் திருநீலகண்டன் ஆனார். அப்படி ஆலகால விசத்தை சிவபெருமான் உண்டு அனைவரையும் காப்பாற்றிய நேரம் மாலை 4.30 டூ 6.00 ஆகும். இதுவே பிரதோச நேரமானது. தேவர்களும் அசுரர்களும் கைலாயத்தை சுற்றி இங்குமங்கும் ஓடிய ஓட்டத்தின்படியே பிரதோச நேரத்தில் பிரகாரத்தை வலம் வரனும். அந்த மாதிரியான வழிமுறை கீழ படத்தில் இருக்கு. பார்த்துக்கோங்க மக்களே!


சிவனுக்கு உரியது திருவாதிரை நட்சத்திரமும், திங்கட்கிழமையும்… அத்தோடு பிரதோசமும் இணைந்துவிட்டால் அந்த நாளின் மகத்துவம் அளப்பறியது. ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இல்லன்னா, சோமவார பிரதோஷம் அன்று சிவன் கோவிலுக்கு சென்று, வில்வ இலையால் சிவனை அர்ச்சித்தால் மதி அதானுங்க சந்திரனும், நம்ம மதியும் அதானுங்க அறிவும் சரியாகும்.  பிரதோஷ கதை பாதிப்பேருக்கு தெரியும். பாதிப்பேருக்கு தெரியாது. பிரதோஷம் அமாவாசை, பௌர்ணமிக்கு முதல் நாளுக்கு முதல் நாள் வரும். அப்புறம் சனிப்பிரதோஷம், சிவராத்திரிக்கு முன் வரும் மகாபிரதோசம்..இப்படி சிலவகைகள் மட்டும் தெரியும்.  பிரதோசத்துல மொத்தம் 20 வகை இருக்கு. அது என்னன்னு இந்த பதிவில் பார்க்கலாம்.
தினசரி பிரதோஷம்: தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள நேரமே பிரதோஷ நேரமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது நலம் தரும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு முக்தி நிச்சயம்  என சொல்லுது நமது சாஸ்திரம். 

2. பட்சப் பிரதோஷம்: அமாவாசைக்கு பிறகான, சுக்லபட்சம்ன்ற வளர்பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் திரயோதசி திதியே பட்சப் பிரதோஷமாகும். இந்த திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடுதுறை,  செய்வது உத்தமம் ஆகும்.

3. மாதப் பிரதோஷம்: பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம்ன்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் திரயோதசி திதியே மாதப் பிரதோஷமாகும். இந்த திதியின் மாலை நேரத்தில் பானலிங்க (பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை. இந்த லிங்கம்  புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, நர்மதை போன்றவற்றில் லிங்க வடிவிலே உருண்டோடி வரும். பாண லிங்கம் வடித்தெடுக்கப் படுவதில்லை. இந்த லிங்கத்தில் எப்பொழுதும் சிவசாநித்யம் உண்டு. பானாசுரன் ஒரு சின்ன உளுந்து முதல் ஒரு முழம் முடிய உள்ள லிங்கங்களை மந்திரங் கொண்டு பூசித்தமையால் பாணலிங்கம் எனப்படுகிறது என்றும் கூறுவர். ஆயிரம் கல் சிவலிங்கத்திற்கு ஒரு ஸ்படிக லிங்கம் சமம் என்றும் 12 லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு ஒரு பாணலிங்கம் சமம்.  


4. நட்சத்திரப் பிரதோஷம்: பிரதோஷ திதியாகிய திரயோதசி திதியில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும். 

5. பூரண பிரதோஷம்: திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின்போது சுயம்பு லிங்கத்தைத் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

6. திவ்யப் பிரதோஷம்: பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது திவ்யப் பிரதோஷம் ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.  
7. தீபப் பிரதோஷம்: பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையுமாம்.


8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்: வானத்தில் வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்கள்தான் சப்தரிஷி மண்டலம் ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

9. மகா பிரதோஷம்: ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் மகா பிரதோஷம் ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும். குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, தண்டீசுவர ஆலயம். திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்ஞீலி சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள ஸ்ரீவாஞ்சியம் சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள திருக்கோடி காவல் சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், மகா பிரதோஷம் எனப்படும்.
10. உத்தம மகா பிரதோஷம்: சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமை. அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானது. சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

11. ஏகாட்சர பிரதோஷம்: வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை ஏகாட்சர பிரதோஷம் என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, ஓம் என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.
12. அர்த்தநாரி பிரதோஷம்: வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

13. திரிகரண பிரதோஷம்: வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
14. பிரம்மப் பிரதோஷம்: ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம். 
15. அட்சரப் பிரதோஷம்: வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். நான் என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.
16. கந்தப் பிரதோஷம்: சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.
17. சட்ஜ பிரபா பிரதோஷம்: ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, சட்ஜ பிரபா பிரதோஷம். தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.
18. அஷ்ட திக் பிரதோஷம்: ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.
19. நவக்கிரகப் பிரதோஷம்: ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.
20. துத்தப் பிரதோஷம்: அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

பிரதோஷ வழிப்பாட்டில் மிக முக்கியமான நபர் நந்தியம்பெருமாள். அவரை பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம்.

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!

நன்றியுடன்,
ராஜி

14 comments:

  1. அற்புதமான விளக்கம்.... படங்கள் ஒவ்வொன்றும் துல்லியம்...!

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே நெட்ல சுட்டதுண்ணே

      Delete
  2. அரிய செய்திகள். அருமையான புகைப்படங்கள்.

    ReplyDelete
    Replies
    1. படித்தவையை பகிர்ந்தேன். அம்புட்டுதான்பா

      Delete
  3. நந்தியம்பெருமாள் என்றுள்ளதே, அது நந்தியம்பெருமான் அல்லவா?

    ReplyDelete
    Replies
    1. சிலருக்கு பக்தியில் கண்மண் தெரியாம போயிடும். அதுமாதிரி எனக்கு ள்,ன்ல குழப்பம்.

      Delete
  4. பிரதோஷ விசேஷங்கள் அறிந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. பிரதோஷ விவரங்கள் இன்னமும் இருக்கு சகோ.

      Delete
  5. தகவல்கள் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  6. பிரதோஷங்கள் இத்தனை இருக்கிறதுஎன்பதே தகவல்தான்

    ReplyDelete
    Replies
    1. இன்னமும் இருக்கு. அதுலாம் பதிவா விரைவில் வரும்ப்பா. டைப்ப நேரம் கிடைக்கல

      Delete