Sunday, February 17, 2019

மயிலாடும் பாறையிலே! - பாட்டு புத்தகம்

குத்துப்பாட்டு கேட்டாலே எத்தனை சோகமா இருந்தாலும் நமக்குள் ஒரு சுறுசுறுப்பு வரும். அதிலும், பிடிச்ச நடிகர் அதில் இருந்தால்?! உற்சாகத்துக்கு கேட்கவா வேணும்?! இன்னிக்கு கார்த்திக் நடிச்ச பாண்டி நாட்டு தங்கம் படத்துல வரும் மயிலாடும் பாறையிலே நாங்க ஆடியிருக்கோம்... பாட்டை பத்திதான் பார்க்கப்போறோம்.... 

இப்ப மாதிரி ஏகப்பட்ட சேனல்கள் இல்லாம டிடி எனப்படும் தூர்தர்ஷன் சேனல் மட்டுமே இருந்த காலமது! ஊர் உலகமே ஒளியும், ஒலியும் பார்க்கும். முதல்நாள் இந்த பாட்டை பார்த்துட்டு வந்து, மறுநாள் என்னைய கலாய்ப்பாங்க. என்னடி! உன் ஆளு குருவிக்காரிக்கிட்ட வாங்கின பாவாடையை கட்டி இருக்கார்ன்னு.... ஒரே அசிங்கமா இருக்கும். ஆனாலும் மனசுக்கு பிடிச்சுட்டா குத்தம் தெரியாதே! எதாவது சொல்லி முட்டுக்கொடுப்பேன். இந்த படம் வெளிவந்த காலக்கட்டத்தில் பள்ளி ஆண்டுவிழாவில் கண்டிப்பா இந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடுவாங்க. தயாரிப்பாளருக்கு என்ன பணநெருக்கடியோ தெரியாது. பாடல் முழுக்க ஒரே காஸ்ட்யூம்தான் :-( டான்ஸும், இசையும் செமயா இருக்குங்குறது வேற விசயம்).

இளையராஜா இசையில், எஸ்.பி.பி, சித்ராவும் ரொம்ப பாஸ்ட்டா பாடி அதகளம் பண்ணி இருப்பார். இன்னிக்கும் இந்த பாட்டை கேட்க நேர்ந்தால் மனசு துள்ளாட்டம் போடும். அன்னிக்கு என் ப்ரெண்ட்ஸ்ங்க கிண்டல் செஞ்சாங்க. இன்னிக்கு நான் பெத்ததுங்க கிண்டல் பண்ணுதுங்க.. என்னம்மா! உன் ஆளு இப்படி..... பச்சைக்கலர் ஜிங்குச்சான்னு  தைய்ய்ய தக்கன்னு குதிக்குறாப்லன்னு... காலம் மாறினாலும் கோலம் மாறாது போல! :-(. ...  கனவுப்பாட்டுன்னாலும் ஒரு ரசனை வேணாமா?! சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி ரேஞ்சுக்கு அரைப்பாவாடைல தலைவனை ஆடவிட்டு ஒரு கிளாமர் ஹீரோவா ஆக்கிட்டீங்களே! என்னமோ போங்கடா!

மயிலாடும் பாறையிலே நாங்க ஆடிருக்கோம்..
மதுரை மேங்காட்டு பொட்டலிலே மெடலு வாங்கி இருக்கோம்..

மயிலாடும் பாறையிலே நாங்க ஆடிருக்கோம்..
மதுரை மேங்காட்டு பொட்டலிலே மெடலு வாங்கி இருக்கோம்...

நாங்க போகாத ஊருமில்லை.. 
இப்ப நாங்கவாங்காத பேருமில்ல..

நாங்க போகாத ஊருமில்லை.. 
இப்ப நாங்கவாங்காத பேருமில்ல.. (மயிலாடும்..)

திருச்சி சேலம் தஞ்சாவூர் பாண்டி பொள்ளாச்சி போலே
ராணி போலே நாட்டியம் ஆடி பெருமை தானே??
பேரு பெத்த சென்னையிலே பரிசு பல வாங்கிவந்தேன்!!
பெரியவங்க கையலதான் பதக்கம் பல பெற்று வந்தேன்!!
ஆட்டம்பாட்டத்துல என்னை யாரும் ஜெயிக்க வரல
போடும் ஆட்டத்துல?? என்னை யாரும் எதிர்க்க வரல
தாளகட்டுக்குள்ள ராகமெட்டுக்குள்ள என்னை எதிர்த்து பாடி பாரு
தாம்ததக்கதீம் தாம்தக்கதீம் எனக்கு யாரும் ஈடு இல்ல!

(மயிலாடும் ...)
ஆடும் குயிலு, பார்த்தா மயிலு ஆஹா ஒயிலுஅப்பப்பா..
ஆடும் போதும், பாடும் போதும் அது ஒரு ஸ்டைலு, ஹோய்.. ஹோய்..
தாளம் எதுவும் தப்பவில்லை, 
பாடும் சுதி விட்டதில்ல,
மேளம் இன்னும் கொட்டவில்லை
தாலிக்கொடி கட்டவில்லை..


பாத்தி கட்டி வெச்சு பாடி நிக்குறேன் கூட நிக்குறேன்
நாட்டு சக்கரயை பார்த்து சொக்குறேன்?? காத்த்து நிக்குறேன்
ஜாதி மல்லிகையை சேர்த்துக்கையிலேதான் சூடி, கூடி எடுக்க நாளும் பாரு..
தாம்ததக்கிடதீம் தாம்தக்கிடதீம் தாளம் எடுத்து பாடி பாரு..
(மயிலாடும் பாறையிலே...)

படம் : பாண்டி நாட்டு தங்கம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பி, சித்ரா
நடிகர்கள்: கார்த்திக், நிரோஷா. 
நன்றியுடன்,
ராஜி

8 comments:

  1. படக் காட்சியிலும் அதே துள்ளலை உணரமுடியும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ. பாடலை கேட்க, பார்க்கும்போது உற்சாகம் நம்மை தொற்றும் என்பது உண்மை

      Delete
  2. அந்த காலத்து குத்துப்பாட்டு...

    ReplyDelete
    Replies
    1. அந்த காலத்தில் எல்லா பள்ளிகளிலும் ஆண்டுவிழாவில் இந்த பாட்டு கண்டிப்பா இருக்கும்.

      Delete
  3. சூப்பர் ..

    ReplyDelete
    Replies
    1. என்னோடு சேர்ந்து பாடலை ரசித்தமைக்கு நன்றி அனு

      Delete