Saturday, October 09, 2010

கடவுள் கவிதை

நீதிமன்றம்:
வரம் கொடுக்காத
கடவுளும்
சிலை உடைத்த
பக்தனும்
எதிர் எதிர் கூண்டுகளில்...,


பாவம்:
எனக்கு கடவுளாய்
அமைய நேர்ந்தது
என் கடவுளின் குற்றம்

நன்றி
ஆனந்தவிகடன்

கடவுளுக்கும் பேதம்:
கடவுளுக்கும்
கடலோர மணலெடுத்து,
அழுக்கடைந்த சிப்பிகளால்
அலங்கரித்த
குழந்தை கட்டிய
கோயிலுக்குள்
பொற்கோயிலை விட்டு
குடிபுக கடவுள் வருவாரா?





No comments:

Post a Comment