Sunday, April 28, 2019

வா! வா! என் வீணையே! - பாட்டு புத்தகம்

ஆர்பரித்து கொட்டும் அருவியை ரசித்து பார்க்கிறோம். ஆனால் சலனமின்றி  நகரும்  ஓடையையும்  நின்று ரசிப்போம். பி.சுசீலா, எஸ்.ஜானகி, சித்ரான்னு எத்தனையோ பாடகிகளின் குரலை கேட்டு ரசித்திருப்போம். இவங்க பாடிய மெல்லிசைப்பாடல்களை ரசித்தாலும் அவங்க குரலில் கொஞ்சம் கடினத்தன்மை இருக்கும். ஆனா,  குயில் மாதிரியான மெல்லிய குரல் இருக்கும் பாடகி யார்ன்னு பார்த்தா வாணி ஜெயராமினை சொல்லலாம். அவங்க பேட்டிகளை கேட்கும்போது இதை உணரலாம்.

தன்னோட  முதல் பாடலான குட்டி படத்துல வரும் போலேரே பப்பீ ஹரா என்ற பாட்டுக்காக தான்சேன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட குரல் இவருடையது.  நித்தம் நித்தம் நெல்லுச்சோறு,  மல்லிகை என் மன்னன் மயங்கும், நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன், என்னுள் ஏதோ ஏங்கும் ஏக்கம்.. ஒரே நாள் உன்னை நான் நிலாவில் காண்கிறேன்", "பாரதி கண்ணம்மா... இப்படி அவரோட ஹிட் பாடல்களை சொல்லிக்கிட்டே போகலாம்... இவரோட குரலில் வந்த பாடலை கேட்கவே நல்லா இருக்கும்.  எஸ்.பி.பியோடு இணைஞ்சு பாடிய பாடல்கள் அத்தனையும் முத்தானது. இந்த ஜோடிக்குரலுக்கு இளையராஜா, கங்கை அமரன் மாதிரியான ஆட்கள் இசையமைத்திருந்தால் இன்னும் சூப்பர்.
இன்னிக்கு நாம பார்க்கப்போறது ஒரு டூயட் பாட்டு. எஸ்.பி.பியுடன் இணைந்து, கங்கை அமரன் இசையில் வந்த வா.. வா.. என் வீணையே! விரலோடு கோபமா?!.... குரலிலே நவரசம் காட்டும் இவர்களின் குரலுக்கு கமலும், அழகான மாதவியும் நடிச்சிருப்பாங்க. மாதவியை பார்க்கும்போதெல்லாம் பதிவர்  ரூபக் ராமின் நினைவு வரும். அவனுக்கு மாதவின்னா ரொம்ப பிடிக்கும். இன்னமும் அந்த கண்களை காதலிக்கிறேன்னு சொல்வாப்ல. 

பயணங்களில் கேட்க பிடிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த பாட்டை கேட்கும்போதே ஒரு உற்சாகம் மனசுக்குள் வருவதை மறுக்கமுடியாது...

வா வா என் வீணையே!
லலா
விரலோடு கோபமா?!
லலா

மீட்டாமல் காதல் ராகம்
யாவும் விளங்கிடுமா ஆஆஆஆ
கிள்ளாத முல்லையே!
காற்றோடு கோபமா?!
இளந்தென்றல் தேடும் போது
ஊடல் ஆகுமா ஆஆஆஆ?!

தண்டோடு தாமரையாட..
வண்டோடு மோகனம் பாட...
நான் பார்த்ததும் நெஞ்சிலே
உன் ஞாபகம் கூட..

தண்டோடு தாமரையாட..
வண்டோடு மோகனம் பாட...
நான் பார்த்ததும் நெஞ்சிலே..
உன் ஞாபகம் கூ..ட

துணை தேடுதோ தனிமை..
 துயர் கூடுதோ?!
தடை மீறுதோ 
உணர்ச்சி அலை பாயுதோ
நாள் தோறும் ராத்திரி வேளையில்
ரகசிய பாஷை தாஆஆஆஆனோ

வா வா உன் வீனை நான்
தனனா
விரல் மீட்டும் வேளைதான்
தனனா
மீட்டாமல் காதல் ராகம்
யாவும் விளங்கிடுமோ ஓஓஓஒ
கிள்ளாத முல்லையே
வந்தாடும் பிள்ளையே
இளந்தென்றல் தேடும் போது
ஊடல் ஆகுமோ ஓஓஓஓ


சந்தோசம் மந்திரம் ஓத...
சந்தர்ப்பம் சாதகமாக...
நாள் பார்த்ததோ இன்னமும்
இந்த நாடகம் போட...

சந்தோசம் மந்திரம் ஓத...
சந்தர்ப்பம் சாதகமாக...
நாள் பார்த்ததோ இன்னமும்
இந்த நாடகம் போட..

இரவாகலாம் இளமை அரங்கேறலாம்!!
உறவாடலாம் இனிய ஸ்வரம் பாடலாம்!!
கேட்காத வாத்திய ஓசைகள்
கேட்க்கையில் ஆசைகள் தீ..ரு..ம்

வா வா வீணையே
லலா
விரலோடு கோபமா
லலா
படம்: சட்டம்
இசை: கங்கை அமரன்
எழுதியவர்: வாலி
நடிகர்கள்: கமல், மாதவி

நன்றியுடன்,
ராஜி

3 comments:

  1. எனக்கு இந்தப் படத்தில் முதலிடத்தில் பிடித்த பாடல் "ஒரு நண்பனின் கதை இது.."

    ReplyDelete
  2. நல்ல பாடல். எனக்கும் பிடிக்கும்.

    ReplyDelete
  3. என்னோட blog உள்ள என்ன போக வச்சுட்டிங்க

    ReplyDelete