Sunday, October 10, 2010

பார்வையாளர் தேவை

எனக்கு
ஒரே ஒரு பார்வையாளராவது
வேண்டும்...,

இல்லாவிட்டால்
என் நம்பிக்கைகள் அர்த்தமற்றதாக்கிவிடும் ,
என் பிரார்த்தனைகள் நிரகரிக்கப்பட்டதாகிவிடும்,
என் கண்ணீர் அவமதிக்கப்பட்டுவிடும்,
என் பிரியங்கள் கேளிச்சித்திரமாக்கப்பட்டுவிடும்,
என் தவிப்புகள் ஒரு மூடனின் கவிதையாகிவிடும்,
என் வாதிகள் வெறும் பாசாங்கிவிடும்,
என் நினைவுகள் நிரந்தரமாக அழிக்கப்பட்டுவிடும்,
என் எதிர்ப்புகள் முற்றிலும் நசுக்கப்பட்டுவிடும்,
என் கேவல்கள் எந்த இதயத்தையும் தொடாமல் போய்விடும்
இந்த நாள் இன்னொரு நாளாய் கடந்துவிடும்
இங்கே நடந்தவற்றிற்கு எந்த சாட்சியமும்
இல்லாமல் போய்விடும்.

எனவே,
எனக்கு ஒரு பார்வையாளனாவது
வேண்டும்....,

1 comment:

  1. //என் நினைவுகள் நிரந்தரமாக அழிக்கப்பட்டுவிடும்,
    என் எதிர்ப்புகள் முற்றிலும் நசுக்கப்பட்டுவிடும்,
    என் கேவல்கள் எந்த இதயத்தையும் தொடாமல் போய்விடும்
    இந்த நாள் இன்னொரு நாளாய் கடந்துவிடும்//

    அருமையான வரிகள் ராஜி சார், தேர்ந்த கவிஞ்சனாகி விட்டர்கள் வாழ்த்துக்கள்
    என் இதயத்தை தொட்ட வரிகள் இவை.

    ReplyDelete