Monday, July 22, 2013

திறக்காத காட்டுக்குள்ளே...,

           
 உன்னோடு கை கோர்த்து நடக்க பழக
ஆசை பட்டதிலிருந்து தெரிந்திருக்க வேண்டும் ,
உனக்கான என் கோபங்களை விட்டு கொடுத்ததிலிருந்து
தெரிந்திருக்க வேண்டும் ,

உன்னோடு உரையாடுவதற்காக என் நொடிகளை
எண்ணி கொண்டு இருக்கும் போதாவது
தெரிந்திருக்க வேண்டும்,
இன்னொரு பெண்ணை பற்றி என்னிடம்
பேசும் போது எனக்கு வந்த கோபத்தில்லாவது
தெரிந்திருக்க வேண்டும்,

உனக்கு பிடித்த பாடல் என்பதால் அதே பாடலை
ஒன்றுக்கு பத்து முறை
நான் கேட்ட போதாவது தெரிந்திருக்க வேண்டும் ,


அப்பொழுதெல்லாம் தெரியாத
உன் மீதான என் காதல்
இதோ இப்பொழுதாவது
உனக்கு தெரிகிறதா ?

இல்லை ...,
அவை எல்லாம்
ஆள்நடமாட்டமில்லாத காட்டில்
கொட்டும் அருவியை போல்
பயனற்றதாய் போய்விட்டதா?

15 comments:

  1. அதுதானே இவ்வளவு நடந்த பின்னும் புரியாத மனம் அது திறவாத கதவு திறக்குமா ?...திறக்கப்பட வேண்டும் .வாழ்த்துக்கள் தங்கச்சி நேரமிருந்தால் வலைச்சரம் பக்கம் எட்டிப் பாருங்கள் .யாரோ ஒரு
    பெரிய vip தன்னை அறிமுகம் செய்துள்ளார் .

    ReplyDelete
  2. நடக்கும் என்பார் நடக்காது...
    நடக்காதென்பார் நடந்துவிடும்...!
    கிடைக்கும் என்பார் கிடைக்காது...
    கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்...!

    ReplyDelete
  3. ///இதோ இப்பொழுதாவது
    உனக்கு தெரிகிறதா ?//

    அப்போது நெட் இல்லாததால் அவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்ப உங்கள் தளத்தில் பதிவு இட்டதால் உலகம் முழுவதும் தெரிஞ்ச்சு போச்சு அதனால கவலைபாடாதீங்க சகோ


    படைப்பு அருமை

    ReplyDelete
  4. அருவியை ரசிக்க ஆள் இல்லைஎன்றாலும், அதன் அழகு அழகுதான்..... காதல் காதல்தான் !!

    ReplyDelete
  5. அழகாக காதலை வெளிப்படுத்தியுள்ளீர்கள்... பாராட்டுகள்.

    ReplyDelete
  6. மிக மிக அழகாக நாசூக்காகக் காதலை வெளிப்படுத்திய கவிதை!
    அருமை! வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  7. காதல் கவிதை அருமை.

    ReplyDelete
  8. arumai...

    mika arumai..

    ReplyDelete
  9. செவிடன் காதுக்குச் சங்கு.....!!

    கவிதை அருமை தோழி. அதிலும் கடைசி பாரா (கேள்வி)மிக மிக அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. தெரிந்தே தெரியாமல் நடிக்கிறானா இருக்குமோ ? இல்லை மக்கு மண் சட்டியாக இருப்பானோ ம்ஹும் மொத்த பேரையும் குழப்பிட்டானே!

    ReplyDelete
  11. கவிதை அருமை.

    ReplyDelete
  12. உன்னோடோ கை கோர்த்து நடக்க பழக
    ஆசை பட்டதிலிருந்து தெரிந்திருக்க வேண்டும் ,
    உனக்கான என் கோபங்களை விட்டு கொடுத்ததிலிருந்து
    தெரிந்திருக்க வேண்டும் ,

    உன்னோடு உரையடுவதகாக என் நொடிகளை
    எண்ணி கொண்டு இருக்கும் போதாவது
    தெரிந்திருக்க வேண்டும்,
    இன்னொரு பெண்ணை பற்றி என்னிடம்
    பேசும் போது எனக்கு வந்த கோபத்தில்லாவது
    தெரிந்திருக்க வேண்டும்,

    உனக்கு பிடித்த பாடல் என்பதால் அதே படலை
    ஒன்றுக்கு பாத்து முறை
    நான் கேட்ட போதாவது தெரிந்திருக்க வேண்டும் ,


    அப்பொழுதெல்லாம் தெரியாத
    உன் மீதான என் காதல்
    இதோ இப்பொழுது தெரிந்து விட்டது,

    இனி நீயும் நானும் பேச போவதில்லை
    என்று தெரிந்து பிரியும் போது ,

    என்றும் உன்னை மறவாமல் உன் நிழலென
    தொடரும் உன் கண்மணி காதலுடன் .


    hi raji ma lost line changesing super

    en kavithaiya rasikavum alla irukaga.

    unga post ellam padichen super ma

    ReplyDelete